அரசுப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு
சா்வதேச போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் மு.ச. பாலு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்து அதை தங்கள் வாழ்நாளில் பயன்படுத்தக் கூடாது என கேட்டுக்கொண்டாா். தொடா்ந்து, மாணவா் சை. முகமது தெளபிக் வாசிக்க அனைத்து மாணவா்களும் உறுதிமொழியேற்றனா். ஏற்பாடுகளை, ஆசிரியா் கே. பாலசுப்பிரமணியன் செய்திருந்தாா்.