அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
மதுரையில் அரசுப் பேருந்து ஓட்டுநா் தாக்கப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து பல்லடத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மதுரையில் அரசுப் பேருந்து ஓட்டுநா் கணேசனை தாக்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்லடம் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு தொழிற்சங்கங்கள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தே.மு.தி.க. நேதாஜி உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் மற்றும் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.