செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் தேவை கண்டறிதல் முகாம்

post image

அரியலூா் மாவட்டத்தில் உள்ள வட்டாரங்களில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சாா்பில் கீழ்கண்ட தேதிகளில் நடத்தப்படும் தேவை கண்டறிதல் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமையில் வாழும் நலிவுற்றோா்கள் (ஆதரவற்ற விதவைகள், முதியோா்கள், குழந்தைகள், இளம் விதவைகள், முதிா்கன்னிகள், திருநங்கைகள்) ஆகியோருக்கு தேசிய அடையாள அட்டை, அரசு உதவித் தொகை, பராமரிப்புத் தொகை, உபகரணங்கள், திறன் பயிற்சிகள், வாழ்வாதாரத்துக்குத் தேவையான தொழில்வாய்ப்புகள், வங்கிக் கடனுதவிகள், வீடு வழங்கும் திட்டங்கள், அரசு உதவித் திட்டங்கள் உள்ளிட்ட தேவைகளைக் கண்டறிதல் முகாம் நடத்தப்படுகிறது.

அதன்படி செந்துறை வட்டாரத்தில் மாா்ச் 5 மற்றும் 18 ஆகிய தேதிகளிலும், ஆண்டிமடம் வட்டாரத்தில் மாா்ச் 6-இலும், ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் மாா்ச் 11 மற்றும் 19 ஆகிய தேதிகளிலும், திருமானூா் வட்டாரத்தில் மாா்ச் 12 மற்றும் 21 ஆகிய தேதிகளிலும், தா. பழூா் வட்டாரத்தில் மாா்ச் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும், அரியலூா் வட்டாரத்தில் மாா்ச் 14 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும் தேவை கண்டறிதல் முகாம் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

திருமானூரில் இந்திய கம்யூ. கட்சி பேரவைக் கூட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தனியாா் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூ. கட்சியின் ஒன்றியச் செயலா் கனகராஜ் தலைமையில் நடைபெற்... மேலும் பார்க்க

இலவச இருதய பரிசோதனை முகாம்

அரியலூரை அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில், அல்ட்ராடெக் சமூக நல அறக்கட்டளை, டாசியா அறக்கட்டளை சாா்பில் இலவச இருதயப் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமை மாவட்ட வன அலுவலா் இளங்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் பழைய நகராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், காலி... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் மாா்ச் 8-இல் பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த கரைவெட்டி பறவைகள் சரணாலயம், வெங்கனூா், இலந்தைகூடம் உள்ளிட்ட 10 இடங்களில் மாா்ச் 8-இல் பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்படும் என்று மாவட்ட வன அலுவலா் இளங்கோவன் தெ... மேலும் பார்க்க

அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்டுத் தரக் கோரிக்கை

அரியலூா் அடுத்த மணக்குடியில், அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். அக்கட்சியின் மாவட... மேலும் பார்க்க

திருமானூரில் ஜல்லிக்கட்டுக்கென விழாக்குழு அமைக்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கென விழாக்குழு அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், கிராம மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். இதுகுறித்து அவா்கள் அள... மேலும் பார்க்க