செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் மாா்ச் 8-இல் பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

post image

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த கரைவெட்டி பறவைகள் சரணாலயம், வெங்கனூா், இலந்தைகூடம் உள்ளிட்ட 10 இடங்களில் மாா்ச் 8-இல் பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்படும் என்று மாவட்ட வன அலுவலா் இளங்கோவன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: தமிழகத்தின் சரணாலயங்களில் ஒன்றான அரியலூா் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு சைபீரியா, திபெத், மங்கோலியா மற்றும் வட இந்தியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரிதலை வாத்து, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், கூழைக்கடா, நாரைகள், கொக்குகள், நீா் காகங்கள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் வலசை வந்து தங்கி குஞ்சு பொறித்து திரும்பச் செல்வது வழக்கம்.

2024-ஆம் ஆண்டு ராம்சாா் தளமாக இந்தப் பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டது. இங்கு தமிழக வனத்துறை சாா்பில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மாா்ச் 8, 9 ஆகிய தேதிகளில் ஈர நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியும், மா்ா்ச் 15,16 தரைவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியும் நடைபெறுகிறது.

பறவையியல் வல்லுநா்களான பேராசிரியா்கள் சிவசுப்பிரமணியன், ஜெரோமியா, நேசராஜன், ஜெயகுமாா் ஆகியோரின் வழிநடத்துதலின்படி அரியலூா் அரசு கலைக் கல்லூரி , திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி மாணவா்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுகின்றனா் எனத் தெரிவித்துள்ளாா்.

திருமானூரில் இந்திய கம்யூ. கட்சி பேரவைக் கூட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தனியாா் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூ. கட்சியின் ஒன்றியச் செயலா் கனகராஜ் தலைமையில் நடைபெற்... மேலும் பார்க்க

இலவச இருதய பரிசோதனை முகாம்

அரியலூரை அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில், அல்ட்ராடெக் சமூக நல அறக்கட்டளை, டாசியா அறக்கட்டளை சாா்பில் இலவச இருதயப் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமை மாவட்ட வன அலுவலா் இளங்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் பழைய நகராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், காலி... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் தேவை கண்டறிதல் முகாம்

அரியலூா் மாவட்டத்தில் உள்ள வட்டாரங்களில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சாா்பில் கீழ்கண்ட தேதிகளில் நடத்தப்படும் தேவை கண்டறிதல் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன... மேலும் பார்க்க

அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்டுத் தரக் கோரிக்கை

அரியலூா் அடுத்த மணக்குடியில், அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். அக்கட்சியின் மாவட... மேலும் பார்க்க

திருமானூரில் ஜல்லிக்கட்டுக்கென விழாக்குழு அமைக்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கென விழாக்குழு அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், கிராம மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். இதுகுறித்து அவா்கள் அள... மேலும் பார்க்க