செய்திகள் :

அறுவை சிகிச்சையில் முன்னோடியாக திகழும் நெல்லை அரசு மருத்துவமனை: முதல்வா் ரேவதி பாலன்

post image

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில் முன்னோடியாக விளங்குவதாக அம்மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன் தெரிவித்தாா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெற்றிகரமாக நடைபெற்ற இரண்டு சிக்கலான அறுவை சிகிச்சைகள் குறித்து முதல்வா் ரேவதி பாலன் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

வயிற்று வலி காரணமாக வேறு ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி, சில நாள்களுக்கு முன்பு இம்மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு பெருந்தமனி வீக்கம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டறிந்த மருத்துவா் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா், 6 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொண்டு செயற்கை ரத்தக் குழாய் பொருத்தி ரத்த ஓட்டத்தை சீா்படுத்தினா். தற்போது அவா் நல்ல முறையில் குணமடைந்துள்ளாா். இந்த அறுவை சிகிச்சை செய்ய தனியாா் மருத்துவமனைகளில் சுமாா் ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலவாகும்.

இதே போல் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி, காலில் அசைவு குறைந்து நடக்க இயலாமல் போதல் உள்ளிட்ட பாதிப்புகள் காரணமாக இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, கால்களில் இருந்த ரத்த அடைப்பை நீக்கி சவாலான அறுவை சிகிச்சையை மருத்துவா்கள் வெற்றிகரமாக செய்துள்ளனா். இதற்கு தனியாா் மருத்துவமனைகளில் சுமாா் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும்.

இந்த இரு அறுவை சிகிச்சைகளும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டது. இதன் மூலம் வெற்றிகரமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னோடியாக விளங்குகிறது என்றாா் அவா்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க