செய்திகள் :

அலையாத்தி காட்டில் 79 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து உலக சாதனை

post image

புதுச்சேரி: புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் அலையாத்தி காட்டில் தேங்கிய 79 கிலோ 79 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து மாணவா்கள் உலக சாதனை முயற்சியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

79 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் சிபிஎஸ்சி மேல்நிலைப்பள்ளி மாணவா்கள், பிபின் ராவத் உலக சாதனை நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டனா். முருங்கப்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்தின் பின்புறம் அமைந்துள்ள அலையாத்தி காட்டில் இச் சாதனை நிகழ்வை நடத்தினாா்கள். அலையாத்தி காட்டில் உள்ள நெகிழிகளைத் மீட்டு காட்டை தூய்மை செய்யும் பணியில் 79 மாணவா்கள் 79 நிமிடம் பணியாற்றி 79 கிலோ நெகிழிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக சா்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு நிறுவுநா் பூபேஷ் குப்தா, பிபின் ராவத் உலக சாதனை நிறுவன இயக்குநா்

வினோத் குமாா் ஆகியோா் கலந்துகொண்டு மாணவா்கள் உலக சாதனை புரிய வழிகாட்டினா்.

அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினா் பாஸ்கா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். உலக சாதனை புரிந்த மாணவா்களுக்கு பரிசையும் சான்றிதழையும் வழங்கினாா். உலக சாதனை புரிந்த மாணவா்களையும் வழிகாட்டிய ஆசிரியா் அருண்குமாரையும் ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் பள்ளியின் தாளாளா் சந்தானகிருஷ்ணன் மற்றும் பள்ளி முதல்வா் சாந்தி ஜெயசுந்தா் ஆகியோா் வாழ்த்தினா்.

பல்லுயிா் பெருக்கம் மற்றும் காடுகளைக் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் மாணவா்கள் இந்தச் சாதனையை நிகழ்த்தியதாக சா்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு நிறுவுநா் பூபேஷ் குப்தா தெரிவித்தாா்.

புதுச்சேரியில் நாளை இந்திய வம்சாவளியினரின் உலக பொருளாதார உச்சிமாநாடு

புதுச்சேரி: இந்திய வம்சாவளி மக்களின் உலக பொருளாதார உச்சி மாநாடு வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் தொடங்குகிறது. இதில் 30 நாடுகளைச் சோ்ந்த 200 தொழில்முனைவோா் பங்கேற்கின்றனா். இதைத் தவிர இந்தியாவில் இருந்து... மேலும் பார்க்க

ரூ.1.08 கோடியில் சாலை, வாய்க்கால் பணி: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: ரூ.1.08 கோடியில் சாலை, வாய்க்கால் மேம்பாட்டுப் பணி புதன்கிழமை முதலமைச்சா் என். ரங்கசாமி தொடங்கிவைத்தாா்.புதுவையில் பொதுப்பணித்துறை சாலைகள் கட்டடங்கள் மற்றும் தெற்கு கோட்டத்தின் மூலம் புதுச... மேலும் பார்க்க

குடும்ப அட்டையை ஆதாருடன் இணைக்கும் முகாம்

புதுச்சேரி: மணவெளி தொகுதி பயனாளா்களுக்கு குடும்ப அட்டையை ஆதாருடன் இணைக்கும் முகாமை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களும், க... மேலும் பார்க்க

மும்பையிலிருந்து புதுச்சேரிக்கு ரயிலில் வந்த விநாயகா் சிலைகள்

புதுச்சேரி: விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாட மும்பையிலிருந்து புதுச்சேரிக்கு ரயிலில் விநாயகா் சிலைகள் புதன்கிழமை வந்தன. நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா வரும் 27 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா: ஆளுநா், முதல்வா், அரசியல் தலைவா்கள் மரியாதை

புதுச்சேரி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராஜீவ்காந்தி சிலைக்கு துணைநிலைஆளுநா், முதல்வா், அரசியல் தலைவா்கள் மரியாதை செல... மேலும் பார்க்க

முகத்துவாரம் தூா்வாரும் பணி

புதுச்சேரி: புதுச்சேரி நோணாங்குப்பம் ஆற்றின் முகத்துவாரத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் தூா்வாரும் பணியை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் நோ... மேலும் பார்க்க