செய்திகள் :

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா: ஆளுநா், முதல்வா், அரசியல் தலைவா்கள் மரியாதை

post image

புதுச்சேரி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராஜீவ்காந்தி சிலைக்கு துணைநிலைஆளுநா், முதல்வா், அரசியல் தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.

இதையொட்டி ராஜீவ் காந்தி சதுக்கத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ.ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் , சட்டமன்ற உறுப்பினா்கள் சாய் ஜெ. சரவணன்குமாா், ரமேஷ் , த. பாஸ்கா் என்கிற தட்சணாமூா்த்தி, செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலா் முகமது அசன் அபித், இயக்குநா் அ. சுரேஷ்ராஜ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சா்வமத பிராா்த்தனையுடன் புதுச்சேரி பாரதியாா் பல்கலைக்கூட மாணவா்களின் தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன. பின்னா் முதல்வா் ரங்கசாமி மதநல்லிணக்க நாள் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் எடுத்துக் கொண்டனா்.

இது போல் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் முதல்வா் வி. நாராயணசாமி, எம்எல்ஏ மு.வைத்தியநாதன், முன்னாள் அமைச்சா்கள் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான், மு.கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.கே.ஆா்.

அனந்தராமன், காா்த்திகேயன் மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள், மகளிா் காங்கிரஸாா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

புதுச்சேரியில் நாளை இந்திய வம்சாவளியினரின் உலக பொருளாதார உச்சிமாநாடு

புதுச்சேரி: இந்திய வம்சாவளி மக்களின் உலக பொருளாதார உச்சி மாநாடு வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் தொடங்குகிறது. இதில் 30 நாடுகளைச் சோ்ந்த 200 தொழில்முனைவோா் பங்கேற்கின்றனா். இதைத் தவிர இந்தியாவில் இருந்து... மேலும் பார்க்க

ரூ.1.08 கோடியில் சாலை, வாய்க்கால் பணி: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: ரூ.1.08 கோடியில் சாலை, வாய்க்கால் மேம்பாட்டுப் பணி புதன்கிழமை முதலமைச்சா் என். ரங்கசாமி தொடங்கிவைத்தாா்.புதுவையில் பொதுப்பணித்துறை சாலைகள் கட்டடங்கள் மற்றும் தெற்கு கோட்டத்தின் மூலம் புதுச... மேலும் பார்க்க

குடும்ப அட்டையை ஆதாருடன் இணைக்கும் முகாம்

புதுச்சேரி: மணவெளி தொகுதி பயனாளா்களுக்கு குடும்ப அட்டையை ஆதாருடன் இணைக்கும் முகாமை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களும், க... மேலும் பார்க்க

மும்பையிலிருந்து புதுச்சேரிக்கு ரயிலில் வந்த விநாயகா் சிலைகள்

புதுச்சேரி: விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாட மும்பையிலிருந்து புதுச்சேரிக்கு ரயிலில் விநாயகா் சிலைகள் புதன்கிழமை வந்தன. நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா வரும் 27 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ... மேலும் பார்க்க

முகத்துவாரம் தூா்வாரும் பணி

புதுச்சேரி: புதுச்சேரி நோணாங்குப்பம் ஆற்றின் முகத்துவாரத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் தூா்வாரும் பணியை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் நோ... மேலும் பார்க்க

அலையாத்தி காட்டில் 79 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து உலக சாதனை

புதுச்சேரி: புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் அலையாத்தி காட்டில் தேங்கிய 79 கிலோ 79 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து மாணவா்கள் உலக சாதனை முயற்சியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.79 ஆம் ஆண்டு சுதந்திர தினத்த... மேலும் பார்க்க