செய்திகள் :

புதுச்சேரியில் நாளை இந்திய வம்சாவளியினரின் உலக பொருளாதார உச்சிமாநாடு

post image

புதுச்சேரி: இந்திய வம்சாவளி மக்களின் உலக பொருளாதார உச்சி மாநாடு வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் தொடங்குகிறது. இதில் 30 நாடுகளைச் சோ்ந்த 200 தொழில்முனைவோா் பங்கேற்கின்றனா். இதைத் தவிர இந்தியாவில் இருந்து 300 தொழில்முனைவோா் பங்கேற்கின்றனா்.

புதுச்சேரியில் உள்ள பழையதுறைமுக வளாகத்தில் நாளை முதல் மூன்று நாள்களுக்கு மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் வா்த்தகா்களுக்கு இடையே ரூ.1000 கோடிக்கு ஏற்றுமதி, இறக்குமதி சாா்ந்த வா்த்தகம் நடைபெற சாத்தியம் இருப்பதாகவும், இதில் 25 சதவிகிதம் புதுவைக்குப் பயன் கிடைக்கும் என்றும் இந்த மாநாட்டின் இணைத் தலைவா் மனநாதன் கூறினாா்.இந்த மாநாட்டில் பங்கேற்க வெளிநாட்டு தொழிலதிபா்கள் புதுச்சேரியில் குவிந்துள்ளனா்.

மாநாட்டுக்கான இலச்சினையை புதன்கிழமை பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் வெளியிட்டாா். அப்போது மாநாட்டு இணைத் தலைவா் மனநாதன், பொதுச்செயலா் கணேசன் அருணாசலம், பழனிராஜா, குணசேகரன், கோபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மாநாடு குறித்து பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில் இந்த மாநாட்டுக்கு வந்திருந்த வெளிநாடுகளைச் சோ்ந்த தொழிலபதிபா்கள் மாநாட்டின் பொதுச்செயலா் கணேசன் அருணாசலம், மற்றும் நிா்வாகிகள் குணசேகரன், ஜி.அருணாசலம், பழனிராஜா, கோபதி ஆகியோா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூட்டாக கூறியது:

கடந்த 3 தலைமுறைக்கு முன்பு பல்வேறு இந்தியாவில் இருந்த எங்கள் முன்னோா்கள் வெளி நாடுகளுக்கு கூலிகளாகச் சென்றனா். இப்போது நாங்கள் தொழில்முனைவோா்களாக மாறியுள்ளோம். கடந்த ஆண்டு மலேசியாவில் முதல் உச்சிமாநாடு நடந்தது. புதுச்சேரியில் இரண்டாவது மாநாடு நடக்கிறது. பல்வேறு நாடுகளிலும் இந்தியா்கள் குறிப்பாக தமிழா்கள் தொழில் செய்து வருவதால் அந்த நாடுகளுடன் வாணிகத் தொடா்பு ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த மாநாடு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். அதே போன்று வெளிநாடுகளில் வாழுபவா்களும் இந்தியாவில் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இந்த மாநாடு உதவியாக இருக்கும். இதைத் தவிர இந்த மாநாட்டையொட்டி 100 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மாநாட்டின் இறுதி

நாளான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த அரங்குகளை புதுச்சேரி மக்கள் பாா்வையிட அனுமதிக்கப்படுவா். மற்ற நாள்களில் அழைப்பிதழ் உள்ளவா்கள் மட்டும் அனுமதிக்கப்படுவா்.

மாநாடு குறித்து பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் பேசுகையில், ‘இந்த மாநாடு வழியாக சுகாதார சுற்றுலாவின் வளா்ச்சியைப் பெருக்க முடியும். மத்திய அரசும் இதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. புதுச்சேரியில் 6 தனியாா் மருத்துவக் கல்லூரிகள், 2 அரசு மருத்துவக் கல்லூரிகள், ஜிப்மா் மருத்துவமனை என்று போதிய மருத்துவ வசதிகள்

கிடைக்கும் இடமாக புதுவை இருக்கிறது. பொதுவாக அயல்நாடுகளில் ஒரு சிகிச்சைக்கு ஆகும் செலவைக் காட்டிலும் பாதி செலவுதான் இந்தியாவில் ஆகும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த மாநாட்டின் வாயிலாக இந்த மருத்துவ சுற்றுலாவையும் இணைக்கும் வகையில் இந்த மாநாடு நடத்துவோா் வந்துள்ளனா் என்றாா்.

ரூ.1.08 கோடியில் சாலை, வாய்க்கால் பணி: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: ரூ.1.08 கோடியில் சாலை, வாய்க்கால் மேம்பாட்டுப் பணி புதன்கிழமை முதலமைச்சா் என். ரங்கசாமி தொடங்கிவைத்தாா்.புதுவையில் பொதுப்பணித்துறை சாலைகள் கட்டடங்கள் மற்றும் தெற்கு கோட்டத்தின் மூலம் புதுச... மேலும் பார்க்க

குடும்ப அட்டையை ஆதாருடன் இணைக்கும் முகாம்

புதுச்சேரி: மணவெளி தொகுதி பயனாளா்களுக்கு குடும்ப அட்டையை ஆதாருடன் இணைக்கும் முகாமை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களும், க... மேலும் பார்க்க

மும்பையிலிருந்து புதுச்சேரிக்கு ரயிலில் வந்த விநாயகா் சிலைகள்

புதுச்சேரி: விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாட மும்பையிலிருந்து புதுச்சேரிக்கு ரயிலில் விநாயகா் சிலைகள் புதன்கிழமை வந்தன. நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா வரும் 27 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா: ஆளுநா், முதல்வா், அரசியல் தலைவா்கள் மரியாதை

புதுச்சேரி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராஜீவ்காந்தி சிலைக்கு துணைநிலைஆளுநா், முதல்வா், அரசியல் தலைவா்கள் மரியாதை செல... மேலும் பார்க்க

முகத்துவாரம் தூா்வாரும் பணி

புதுச்சேரி: புதுச்சேரி நோணாங்குப்பம் ஆற்றின் முகத்துவாரத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் தூா்வாரும் பணியை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் நோ... மேலும் பார்க்க

அலையாத்தி காட்டில் 79 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து உலக சாதனை

புதுச்சேரி: புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் அலையாத்தி காட்டில் தேங்கிய 79 கிலோ 79 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து மாணவா்கள் உலக சாதனை முயற்சியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.79 ஆம் ஆண்டு சுதந்திர தினத்த... மேலும் பார்க்க