KKR: கோப்பையை வென்றும் கேப்டனை விட்டுக் கொடுத்த அணி - அதே கோர் டீம்; புது கேப்டன...
அஸ்வின் வசிக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி முடிவு!
சென்னையில் உள்ள ஒரு சாலைக்கு இந்திய வீரர் அஸ்வின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர் என்று அழைக்கப்படும் இந்திய சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
பார்டர் - காவஸ்கர் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியுடன் சென்ற அஸ்வின், 3-வது போட்டி முடிவில் திடீரென்று ஓய்வை அறிவித்து நாடு திரும்பினார். 106 டெஸ்ட்டில் 537 விக்கெட்டுகள், இதில், 37 முறை 5 விக்கெட்டுகள், 8 முறை 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிக்க: டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாக ஜெய்ஸ்வால் செய்ய வேண்டியதென்ன?
கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை அளித்த அஸ்வினுக்கு கடந்த ஜனவரி மாதம் பத்மஸ்ரீ விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில், சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ராமகிருஷ்ணபுரம் 1-வது தெரு ரவிச்சந்திரன் அஸ்வின் வசித்து வருகிறார். அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக அவர் வசித்துவரும் ராமகிருஷ்ணபுரம் 1-வது தெருவுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரைச் சூட்ட சென்னை பெருநகர மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: லக்னௌ அணியில் இணையும் ஷர்துல் தாகுர்? மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போனவர்!