செய்திகள் :

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!

post image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது சிறப்பான சாதனை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்தியா மாஸ்டர்ஸ் அணி இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இதையும் படிக்க: ஹசன் நவாஸ் அதிவேக சதம்: 205 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து பாகிஸ்தான் அசத்தல்!

சிறப்பான சாதனை

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது சிறப்பான சாதனை எனவும், ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டதற்கு கிடைத்த வெற்றி எனவும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது மிகவும் சிறப்பான சாதனை. இந்த வெற்றி ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டதை காட்டுகிறது. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் வெவ்வேறு சூழல்களில் சிறப்பாக செயல்பட்டனர்.

இதையும் படிக்க:அஸ்வின் வசிக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி முடிவு!

யூசுப் பதானின் அதிரடியான ஆட்டம் இலங்கைக்கு எதிராக பெரிய அளவிலான ரன்கள் குவிக்க உதவியது. சங்ககாராவின் விக்கெட்டினை மிகவும் முக்கியமான தருணத்தில் இர்ஃபான் பதான் கைப்பற்றினார். அதன் பின், அபிமன்யு மிதுன் நெருக்கடி அளிக்கும் விதமாக சிறப்பாக பந்துவீசினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் சிறப்பாக செயல்பட்டார். அவர் அதிரடியாக விளையாடினார். ஷாபாஸ் நதீம் அற்புதமாக பந்துவீசினார். அவர் முக்கியமான தருணத்தில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்றார்.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 25 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

ஹசன் நவாஸ் அதிவேக சதம்: 205 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து பாகிஸ்தான் அசத்தல்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹசன் நவாஸ் சதத்தால் 205 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்தது பாகிஸ்தான்.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட... மேலும் பார்க்க

அஸ்வின் வசிக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி முடிவு!

சென்னையில் உள்ள ஒரு சாலைக்கு இந்திய வீரர் அஸ்வின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர் என்று அழைக்கப்படும் இந்திய சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் கட... மேலும் பார்க்க

பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் - லக்னௌ போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்!

பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் - லக்னௌ போட்டி குவாஹாட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. ம... மேலும் பார்க்க

ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடரும்! -பிசிசிஐ

நிகழாண்டுக்கான ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடருமா? என அனைவர் மத்தியிலும் கேள்வியெழுந்துள்ளது. 18-வது ஐபிஎல் தொடர் வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடரின் தொடக்கப் போட... மேலும் பார்க்க

மிரட்டிய டிராவிஸ் ஹெட்: விராட் கோலி அளித்த பரிசால் சதமடித்த நிதீஷ் ரெட்டி!

இந்தியாவின் ஆல்-ரவுண்டர் நிதீஷ் ரெட்டி பூமா பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் விராட் கோலி தனக்கு அளித்த பரிசு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால... மேலும் பார்க்க

ஐபிஎல்லின் 2-வது இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்த அனுமதி! புதிய விதிகள் என்ன?

ஐபிஎல்லில் 2-வது இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.18-வது ஐபிஎல் தொடர் வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடரில் தொடக்கப் போட்டியில் கொல்கத்தா மற்றும்... மேலும் பார்க்க