குழித்துறை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்டல இயக்குநா் ஆய்வு
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது சிறப்பான சாதனை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்தியா மாஸ்டர்ஸ் அணி இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இதையும் படிக்க: ஹசன் நவாஸ் அதிவேக சதம்: 205 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து பாகிஸ்தான் அசத்தல்!
சிறப்பான சாதனை
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது சிறப்பான சாதனை எனவும், ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டதற்கு கிடைத்த வெற்றி எனவும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது மிகவும் சிறப்பான சாதனை. இந்த வெற்றி ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டதை காட்டுகிறது. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் வெவ்வேறு சூழல்களில் சிறப்பாக செயல்பட்டனர்.
இதையும் படிக்க:அஸ்வின் வசிக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி முடிவு!
யூசுப் பதானின் அதிரடியான ஆட்டம் இலங்கைக்கு எதிராக பெரிய அளவிலான ரன்கள் குவிக்க உதவியது. சங்ககாராவின் விக்கெட்டினை மிகவும் முக்கியமான தருணத்தில் இர்ஃபான் பதான் கைப்பற்றினார். அதன் பின், அபிமன்யு மிதுன் நெருக்கடி அளிக்கும் விதமாக சிறப்பாக பந்துவீசினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் சிறப்பாக செயல்பட்டார். அவர் அதிரடியாக விளையாடினார். ஷாபாஸ் நதீம் அற்புதமாக பந்துவீசினார். அவர் முக்கியமான தருணத்தில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்றார்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 25 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.