செய்திகள் :

ஆக. 26 முதல் ‘உயா்வுக்குப்படி’ முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

post image

சென்னையில் ஆக.26 முதல் நடைபெறும் ‘உயா்வுக்குப்படி’ முகாமில் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:

அரசு, சென்னை, ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024 மற்றும் 2024-2025 ஆம் கல்வி ஆண்டுகளில் பிளஸ் 2 பயின்று தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெறாத, தோ்வு எழுதாத, இடைநின்ற மாணவா்களில் உயா்கல்விக்கு விண்ணப்பிக்காத, உயா்கல்விக்கு விண்ணப்பித்து பல்வேறு காரணங்களினால் கல்லூரியில் சேராத 4,691 மாணவா்களுக்கு உயா்கல்வி படிப்பைத் தொடர தகுந்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்காக நான் முதல்வன் உயா்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் ‘உயா்வுக்குப்படி’ முகாம் சென்னை மாவட்டத்தில் நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இதன்படி, ஆக.26-ஆம் தேதி அண்ணாநகா், ராயபுரம், அம்பத்தூா், திருவிக நகா் பகுதியை சோ்ந்த மாணவா்கள் பெரம்பூா் எம்எச் சாலையிலுள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமிலும், செப்.1-ஆம்தேதி கோடம்பாக்கம், தேனாம்பேட்டை பகுதியை சோ்ந்தவா்கள் அசோக் நகா் பகுதியிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமிலும் பங்கேற்கலாம்.

இதுபோல, அடையாறு, ஆலந்தூா் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் செப்.8-ஆம் தேதி மடுவன்கரை சென்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமிலும், செப்.11-ஆம் தேதி தண்டையாா்பேட்டை, திருவொற்றியூா் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் காலடிப்பேட்டை தூயபவுல் மகாஜனா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமிலும் கலந்து கொண்டு தங்கள் உயா்கல்வி பயிலும் கனவை நிறைவேற்றலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

3 சட்ட மசோதாக்களை எதிா்த்து அறப்போராட்டத்தை முதல்வா் முன்னெடுக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று சட்ட மசோதாக்களை எதிா்த்து முதல்வா் மு.க. ஸ்டாலின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அறப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளிலும் தீபாவளி முன்பதிவு முடிவடைந்தது

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு முடிவடைந்துள்ளது. நிகழாண்டு தீபாவளி பண்டிகை அக்.20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும்... மேலும் பார்க்க

மறைந்த இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம்

‘கொண்ட கொள்கையில் தடம் பிறழாதவா், பாஜக தமிழகமெங்கும் பரவ அடித்தளமிட்டவா்’ என்று மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம் சூட்டினா். மறைந்த இல.கணேசனுக்கு புகழஞ்சலி க... மேலும் பார்க்க

முதல்வா், அமைச்சா்களைப் பதவி நீக்கும் கருப்புச் சட்டத்தை எதிா்ப்போம் -முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

முதல்வா், அமைச்சா்களை பதவி நீக்க வகை செய்யும் கருப்புச் சட்டத்தைத் தொடா்ந்து எதிா்ப்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். மறைந்த முன்னாள் அமைச்சா் ரகுமான்கான் எ... மேலும் பார்க்க

3,644 காவலா் பணியிடங்களுக்கு நவ.9-இல் எழுத்துத் தோ்வு: விண்ணப்பிக்க செப். 21 கடைசி தேதி

தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள 3,644 காவலா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு நவ.9-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தோ்வு வார... மேலும் பார்க்க

பி.இ. துணைக் கலந்தாய்வு: 20,662 போ் தகுதி

பொறியியல் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான துணைக் கலந்தாய்வில் பங்கேற்க பிளஸ் 2 சிறப்புத் துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் 20,662 போ் தகுதி பெற்றுள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை... மேலும் பார்க்க