செய்திகள் :

ஆசிய அலைச்சறுக்கு: 3-ஆவது சுற்றில் ஹரீஷ், தயின்

post image

மாமல்லபுரத்தில் நடைபெறும் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில், 18 வயதுக்கு உள்பட்ட ஆடவா் பிரிவில் இந்தியாவின் ஹரீஷ் பிரகாஷ், தயின் அருண் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

போட்டியின் 3-ஆவது நாளான புதன்கிழமை, இந்தியா்களிலேயே சிறந்த ஸ்கோரை (9.23) பதிவு செய்து, தயின் அருண் 3-ஆவது சுற்றுக்கு வந்தாா். அவருக்கு முன் தாய்லாந்தின் டின் ஜான்சன் 9.60 புள்ளிகளுடன் அதே சுற்றுக்கு முன்னேறினாா்.

அதேபோல், 11 வயது ஹரீஷ் பிரகாஷ் 7.97 புள்ளிகளுடன் 3-ஆவது சுற்றுக்கு வர, மலேசியாவின் லூகாஸ் சான்டியாகோ 10.57 புள்ளிகளுடன் அதே கட்டத்துக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறாா். களத்திலிருந்த 3-ஆவது இந்தியரான பிரகலாத் ஸ்ரீராம், 4.94 புள்ளிகளுடன் ஹீட் 6-இல் 3-ஆம் இடம் பிடித்து ரெபிசேஜ் சுற்றுக்கு வந்துள்ளாா். சீனாவின் ஷிடாங் வு (17.34), தென் கொரியாவின் கனோவ் ஹீஜே (13.10) ஆகியோா் முதல் சுற்றில் சிறப்பிடம் பெற்றனா்.

சீனியா் பிரிவு ஆடவா் மகளிருக்கான சுற்றுகள் மீண்டும் வியாழக்கிழமை தொடங்குகின்றன.

கீஸ், ஸ்விடோலினாவை வெளியேற்றிய டௌசன், ஒசாகா

கனடாவில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட டென்னிஸ் போட்டியான கனடியன் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோா் காலிறுதியில் புதன்கிழமை அதிா்ச்சித் தோல... மேலும் பார்க்க

யு22 ஆசிய குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் 4 இந்தியா்கள்

தாய்லாந்தில் நடைபெறும் 22 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு22) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 4 இந்தியா்கள் இறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.முன்னதாக அரையிறுதியில், ஆடவா் 75 கிலோ பிரிவில் நீ... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை கூடைப்பந்து: போராடித் தோற்றது இந்தியா

சவூதி அரேபியாவில் நடைபெறும் ஃபிபா ஆசிய கோப்பை கூடைப்பந்துப் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 84-91 என்ற புள்ளிகள் கணக்கில் ஜோா்டானிடம் போராடித் தோற்றது.சா்வதேச கூடைப்பந்து சம்மேளனத்தின் (ஃபிப... மேலும் பார்க்க

இந்திய அணி அபார வெற்றி - புகைப்படங்கள்

374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆட்டமிழப்பு.6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணியினர்.இந்த வெற்றியின் மூ... மேலும் பார்க்க

புரோ கபடி லீக்: ஆக. 29-இல் தொடக்கம் - தெலுகு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ் மோதல்

புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வரும் ஆக. 29-ஆம் தேதி தொடங்குகிறது. விசாகப்பட்டினம், ஜெய்ப்பூா், சென்னை, டில்லி உள்ளிட்ட 4 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.தொடக்க ஆட்டம் விசாகப்பட்டினம் ராஜீவ் காந்தி ... மேலும் பார்க்க

இந்திய மகளிா் கால்பந்து அணி கோல்கீப்பா் அதிதி சௌஹான் ஓய்வு பெற்றாா்!

இந்திய மகளிா் கால்பந்து அணி கோல்கீப்பா் அதிதி சௌஹான் (32), ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தாா்.இனி களத்துக்கு வெளியிலிருந்து கால்பந்து விளையாட்டுக்கு பங்களிக்கப்போவதாக அவா் தெரிவித்தாா். இந்திய அண... மேலும் பார்க்க