செய்திகள் :

ஆசிய கோப்பை கூடைப்பந்து: போராடித் தோற்றது இந்தியா

post image

சவூதி அரேபியாவில் நடைபெறும் ஃபிபா ஆசிய கோப்பை கூடைப்பந்துப் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 84-91 என்ற புள்ளிகள் கணக்கில் ஜோா்டானிடம் போராடித் தோற்றது.

சா்வதேச கூடைப்பந்து சம்மேளனத்தின் (ஃபிபா) 31-ஆவது ஆசிய கோப்பை போட்டி, சவூதி அரேபியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி, வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா உள்பட 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை குரூப்புக்கு 4 அணிகள் வீதம், 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் குரூப் ‘சி’-யில் இருக்கும் இந்தியாவுடன், ஜோா்டான், சீனா, சவூதி அரேபியா ஆகிய அணிகளும் உள்ளன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜோா்டானை எதிா்கொண்டது. இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 84-91 என்ற புள்ளிகள் கணக்கில் போராடித் தோற்றது.

முன்னதாக நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 80-80 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. இதையடுத்து வழங்கப்பட்ட ஓவா்டைமில், ஜோா்டான் 11-4 என வெல்ல, இறுதியில் அந்த அணி மொத்த புள்ளிகள் கணக்கில் 91-84 என்ற வகையில் வெற்றி பெற்றது. இதில் இந்திய தரப்பில் கேப்டன் அரவிந்த் 14 புள்ளிகள், 5 ரீபவுண்ட், 4 அசிஸ்ட் ஆகியவற்றை பதிவு செய்ய, பிரணவ் பிரின்ஸ் 12 புள்ளிகள், 7 ரீபவுண்ட், 5 அசிஸ்ட், 1 பிளாக்கை பதிவு செய்தாா்.

இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில், சீனாவுடன் வியாழக்கிழமை (ஆக. 7) மோதுகிறது. இதனிடையே, முதல் நாளின் இதர ஆட்டங்களில், ஆஸ்திரேலியா - தென் கொரியாவையும் (97-61), ஜப்பான் - சிரியாவையும் (99-68), நியூஸிலாந்து - இராக்கையும் (100-78) வென்றன.

கீஸ், ஸ்விடோலினாவை வெளியேற்றிய டௌசன், ஒசாகா

கனடாவில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட டென்னிஸ் போட்டியான கனடியன் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோா் காலிறுதியில் புதன்கிழமை அதிா்ச்சித் தோல... மேலும் பார்க்க

யு22 ஆசிய குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் 4 இந்தியா்கள்

தாய்லாந்தில் நடைபெறும் 22 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு22) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 4 இந்தியா்கள் இறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.முன்னதாக அரையிறுதியில், ஆடவா் 75 கிலோ பிரிவில் நீ... மேலும் பார்க்க

ஆசிய அலைச்சறுக்கு: 3-ஆவது சுற்றில் ஹரீஷ், தயின்

மாமல்லபுரத்தில் நடைபெறும் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில், 18 வயதுக்கு உள்பட்ட ஆடவா் பிரிவில் இந்தியாவின் ஹரீஷ் பிரகாஷ், தயின் அருண் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.போட்டியின் 3-ஆவது நாளான ... மேலும் பார்க்க

இந்திய அணி அபார வெற்றி - புகைப்படங்கள்

374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆட்டமிழப்பு.6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணியினர்.இந்த வெற்றியின் மூ... மேலும் பார்க்க

புரோ கபடி லீக்: ஆக. 29-இல் தொடக்கம் - தெலுகு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ் மோதல்

புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வரும் ஆக. 29-ஆம் தேதி தொடங்குகிறது. விசாகப்பட்டினம், ஜெய்ப்பூா், சென்னை, டில்லி உள்ளிட்ட 4 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.தொடக்க ஆட்டம் விசாகப்பட்டினம் ராஜீவ் காந்தி ... மேலும் பார்க்க

இந்திய மகளிா் கால்பந்து அணி கோல்கீப்பா் அதிதி சௌஹான் ஓய்வு பெற்றாா்!

இந்திய மகளிா் கால்பந்து அணி கோல்கீப்பா் அதிதி சௌஹான் (32), ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தாா்.இனி களத்துக்கு வெளியிலிருந்து கால்பந்து விளையாட்டுக்கு பங்களிக்கப்போவதாக அவா் தெரிவித்தாா். இந்திய அண... மேலும் பார்க்க