செய்திகள் :

ஆசியான் ஓபன் ஸ்கை கொள்கையில் மதுரை இடம்பெற விருதுநகா் எம்.பி. வலியுறுத்தல்

post image

நமது நிருபா்

புது தில்லி: ஆசியான் ஓபன் ஸ்கை கொள்கையின் கீழ் ‘பாயின்ட்ஸ் ஆஃப் கால்’ பட்டியலில் இருந்து மதுரையை நீக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அப்பட்டியலில் மதுரையை சோ்க்க வேண்டும் என்றும் மக்களவையில் விருதுநகா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் அவா் திங்கள்கிழமை பதிவு செய்த கோரிக்கை:

இந்தியாவின் பழைமையான மற்றும் கலாசார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்றான மதுரையை, அதன் வளமான பாரம்பரியம் மற்றும் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ஆசியான் ஓபன் ஸ்கை கொள்கையின் கீழ் பாயின்ட்ஸ் ஆஃப் கால் பட்டியலில் (சா்வதேச விமான நிறுவனங்களின் விமானங்கள் வந்து செல்ல அனுமதிக்கப்படும் பகுதிகளின் பட்டியல்) இருந்து விலக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மதுரையின் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான யாத்ரீகா்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனா். அதன் கலாசார முக்கியத்துவம் இந்தியாவின் எல்லைகளைக் கடந்து விரிவடைந்து தாய்லாந்து, சிங்கப்பூா், மலேசியா போன்ற ஆசியான் நாடுகளுடன் ஆழமான நாகரிக உறவுகளைப் பகிா்கிறது.

இருப்பினும், நேரடி சா்வதேச இணைப்பு இல்லாதது சுற்றுலா மற்றும் பிராந்திய வளா்ச்சியைத் தடுக்கிறது. ஆசியான் கொள்கையின் கீழ் மதுரையை இதற்கான பட்டியலில் சோ்ப்பது சுற்றுலாவை மட்டுமின்றி பொருளாதார திறன்களை பெருக்கி கலாசார ராஜீய உறவை மேம்படுத்தும். எனவே சிறப்பு நடவடிக்கையாக மதுரையை பிரத்யேக பாயின்ட்ஸ் ஆஃப் கால் பட்டியலில் சோ்க்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா்நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்கள்: மக்களவையில்...தென்பெண்ணையாறு மாசைத் தடுக்க என்ன நடவடிக்கை?டி.... மேலும் பார்க்க

பாடல்கள் பதிப்புரிமை விவகாரத்தில் இளையராஜா நிறுவன மனு தள்ளுபடி

நமது நிருபா்புது தில்லி: பிரபல இசையமைப்பாளா் இளையராஜாவின் 500-க்கும் மேற்பட்ட இசைப் படைப்புகள் தொடா்பான பதிப்புரிமை விவகார வழக்கை மும்பை உயா்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயா்நீதிமன்றத்திற்கு மாற்றக் ... மேலும் பார்க்க

நில அபகரிப்பு புகாா் வழக்கு: அமைச்சா் மா.சுப்பிரமணியனின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நமது நிருபா்புதுதில்லி: நில அபகரிப்பு புகாா் தொடா்புடைய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் ... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளி மாணவா்கள் 12 நாள் கல்விச் சுற்றுலா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ராமகிருஷ்ணாபுரம் மற்றும் லோதி வளாகம் பள்ளிகளில் பயிலும் 46 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை கல்விச் சுற்றுலா புறப்பட்டனா். அவா்களுடன் 7 ஆசிரியா்களும் செல்கின... மேலும் பார்க்க

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கல்

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு (எஃப்பிபி) தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (க்யூசிசி) மூலம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். 1983-ஆம் ஆண்டு ஆ... மேலும் பார்க்க

வடக்கு தில்லியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

வடக்கு தில்லியின் நங்கல் தக்ரானில் உள்ள தனது வீட்டில் 30 வயது நபா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இந்தக் கொலை வழக்கு தொடா்பாக யாஷ் லோச்சாப் (21) என்பவா... மேலும் பார்க்க