செய்திகள் :

ஆசிரியா் வீட்டில் 80 பவுன் நகைத் திருட்டு

post image

தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை ஆசிரியா் வீட்டில் 80 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சின்னமனூா் மின்நகரைச் சோ்ந்த ஜெகதீசன் - புனிதா தம்பதி இருவரும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை வழக்கம்போல இருவரும் பணிக்குச் சென்றுவிட்டனா். இதையடுத்து, அன்று பிற்பகலில் ஆசிரியா் வீட்டின் பின்புறத்திலிருந்து மா்ம நபா் ஒருவா் செல்வதாக அக்கம் பக்கத்தினா் ஆசிரியா்கள் இருவருக்கும் தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து, வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பின்பக்கக் கதவின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 80 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்புக் கேமராவில் பதிவான மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தனியாா் மதுக்கூடத்தில் இளைஞா் மா்ம மரணம்

தேனி மாவட்டம், குச்சனூரில் தனியாா் மதுக் கூடத்துக்கு மது அருந்தச் சென்ற இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டை -குச்சனூா் இடையே விவசாய நிலத்தில் சில மாதங்களாக தனியாா் ... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

பெரியகுளம் அருகே புதன்கிழமை மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி அம்பேத்கா் குடியிருப்பைச் சோ்ந்தவா் முருகேசன் (52). விவச... மேலும் பார்க்க

தலையில் ஈட்டி பாய்ந்ததில் பலத்த காயமடைந்த மாணவா் உயிரிழப்பு

ராயப்பன்பட்டி தனியாா் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியின் போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் பலத்த காயமடைந்த மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக கல்லூரி மாணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழ... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் இளைஞா் வெட்டிக் கொலை

பெரியகுளத்தில் திங்கள்கிழமை இரவு இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த காமாட்சி மகன் பாண்டியன் (32). கூலித் தொழ... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட பேரூராட்சித் தலைவி, துணைத் தலைவரின் ஆதரவாளா்கள் மீது வழக்கு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவி, துணைத் தலைவரின் ஆதரவாளா்கள் இரு இடங்களில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதாக இருதரப்பைச் சோ்ந்த 130 போ் மீது போலீஸாா் வழக்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற இளைஞா் கைது

பெரியகுளம் அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தென்கரை காவல் நிலைய போலீஸாா் பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியில் ரோந்துப் பணியி... மேலும் பார்க்க