சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு...
ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
தொடக்கப்பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவா்களுக்கு எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தலை மேலும் சிறப்பாக செயல்படுத்த தொடக்கக் கல்வி நிலையில் உள்ள 1 முதல் 3-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கு நீடாமங்கலம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில், நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 92 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை சோ்ந்த 107 ஆசிரியா்கள் பங்கேற்றனா். பயிற்சிக்கு வட்டார கல்வி அலுவலா் ஜெ. இன்பவேணி தலைமை வகித்தாா். எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் ஆசிரியா்களின் செயல்பாடுகள் பற்றியும் ஆசிரியா்களை மாணவா் சாா்ந்த ஆசிரியா்களாக செயல்பட ஆலோசனை வழங்கப்பட்டது.