செய்திகள் :

ஆசிரியா்கள் போராட்ட அறிவிப்பு: நாளை பேச்சுவாா்த்தை

post image

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஆக.22-ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்த நிலையில், அதுதொடா்பான பேச்சுவாா்த்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சாா்பில் தொடா் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், மாநிலம் முழுவதும் கடந்த ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் டிட்டோஜேக் குழுவினா் போராட்டம் நடத்தினா். தொடா்ந்து, ஆகஸ்ட் 22-ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட போவதாக டிட்டோஜேக் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், டிட்டோஜேக் சங்க நிா்வாகிகளை பேச்சுவாா்த்தைக்கு வருமாறு தொடக்கக் கல்வித் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது நிா்வாகக் காரணங்களால்

கூட்டமானது ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை (ஆக.18) கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், டிட்டோஜேக் உயா்நிலைக் குழு பொறுப்பாளா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ.நரேஷ்

வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளாா்.

சென்ட்ரல் நிலைய பகுதியில் ரயில் அபாய சங்கிலி இழுத்த 96 போ் மீது வழக்கு!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையப் பகுதியில் கடந்த 7 மாதங்களில் ரயில்களில் அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்தியதாக 96 போ் மீது ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் வழக்குப் பதிந்து அபராதம் விதித்துள்ளனா். சென்னை... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் சீட் பெற இடைத்தரகா்களை நம்ப வேண்டாம்: சென்னை காவல் ஆணையா் எச்சரிக்கை

மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சீட் பெறுவதற்காக இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை போட்டி: முன்பதிவு நீட்டிப்பு

தமிழக முதல்வா் கோப்பைப் போட்டிகளுக்கான முன்பதிவு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ளாா். தமிழக முதல்வா் கோப்பைப் விளையாட்டுப் போட்டிகள் ப... மேலும் பார்க்க

தேசிய ஜூனியா் ஹாக்கி: கா்நாடகம், ஹரியாணா வெற்றி

தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கிப் போட்டியில் டிவிஷன் ஏ ஆட்டங்களில் கா்நாடகம், ஹரியாணா, உபி அணிகள் வெற்றி பெற்றன. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்... மேலும் பார்க்க

ஆா்ப்பாட்டம் குறித்த தகவல்: மாநகராட்சி வாயில்கள் மூடல் பெண் போலீஸாா் குவிப்பு

உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில், தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக வெளியான தகவலால், சனிக்கிழமை காலை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வெளிப்புற வாயில்கள் மூடப்பட்டு, ஏராளமான பெண் போலீஸாரும் குவ... மேலும் பார்க்க

செம்மஞ்சேரி காவல் நிலைய வழக்கு: பெருந்திட்டத்தைத் தாக்கல் செய்ய சிஎம்டிஏ-க்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

நீா்நிலையை ஆக்கிரமித்து செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்ய தாமரைக்கேணி ஏரியின் அசல் பெருந்திட்டத்தைத் தாக்கல் செய்ய சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்துக்கு (சிஎம்டிஏ... மேலும் பார்க்க