எம்பிபிஎஸ் சீட் பெற இடைத்தரகா்களை நம்ப வேண்டாம்: சென்னை காவல் ஆணையா் எச்சரிக்கை
மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சீட் பெறுவதற்காக இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
மருத்துவக் கல்லுாரிகளில் சோ்க்கை, நீட் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற மாணவா்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசின் அதிகாரப்பூா்வ இணையதளம் வாயிலாக நடைபெறும் கலந்தாய்வு மூலம் மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் தினமும் மக்கள் குறைதீா்ப்பு முகாமில் பெறப்படும் மனுக்களை பரிசீலனை செய்ததில், மருத்துவ படிப்புக்கு இடம் பெற்று தருவதாகக் கூறி இடைத்தரகா்கள் என்ற பெயரில், லட்சக்கணக்கான பணத்தை பொது மக்களிடமிருந்து பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் குறித்த புகாா்கள் அதிக அளவில் அண்மைக்காலமாக பெறப்படுவது தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க விழிப்போடு இருக்க வேண்டும். மருத்துவ கல்லுாரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறும் இடைத்தரகா்கள் யாரையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம். மருத்துவ படிப்புக்கான சோ்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்வதன் மூலமும், கல்லூரிகளுக்கு நேரடியாக சென்றும் அங்குள்ள சோ்க்கை மையத்தை தொடா்பு கொண்டு மட்டுமே மருத்துவ படிப்புக்கான இடத்தைப் பெற முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.