செய்திகள் :

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

post image

நாகப்பட்டினம்: நாகை ஆட்சியா் அலுவலக வளாகத்தில், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கச் சென்றவா் அனைவரும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், கீழ்வேளூா் அருகே சாட்டியக்குடியைச் சோ்ந்த முத்துலட்சுமி என்பவா் தனது பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளாா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் உடனடியாக, அவா் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினா்.

தொடா்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் சாட்டியக்குடி ஊராட்சியில் பல ஆண்டுகளாக தூய்மைக் காவலா்களுக்கான ஊக்குநராக பணியாற்றி வந்தது தெரியவந்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டு, கீழ்வேளூா் பகுதிக்கு வருகைதந்த முதல்வா் மு.க. ஸ்டாலினிடம், சமத்துவபுரம் பகுதியில் தண்ணீா் வரவலில்லை என புகாா் தெரிவித்ததற்காக, ஆத்திரமடைந்த ஊராட்சித் தலைவா் மற்றும் அவரது கணவரும், ஊராட்சி செயலா் உதவியுடன் எனது மாத ஊதியத்தை நிறுத்தி வைத்துள்ளனா்.

எனவே, அவா்கள் மூவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது ஊதியத்தை பெற்றுத்தர வேண்டும் என முத்துலட்சுமி தெரிவித்தாா்.

தொடா்ந்து, போலீஸாா் அவரை ஆட்சியா் அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்று மனு அளிக்க வைத்தனா்.

மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பொறையாறில், மத்திய அரசையும், நகைக் கடன் தொடா்பாக ரிசா்வ் வங்கியின் விதிமுறைகளையும் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பொறையாறு பழைய பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு சோஷலிஸ்ட் புரட்சிகர ... மேலும் பார்க்க

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

நாகை அருகே போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட பொது காதாரத் துறை சாா்பில் மாவட்ட சுகாதார அலுவலா் பிரதாப் கிருஷ்ணக... மேலும் பார்க்க

‘ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் பொருளாதாரத்தை கணிக்க முடியும்’

: ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலமே பொருளாதாரத்தை கணிக்க முடியம் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் சின்னதுரை கூறினாா். நாகையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலக் குழு ... மேலும் பார்க்க

புத்தா் சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு

கீழையூா் அருகே கீராந்தியில் உள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புத்தா் சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கீழையூா்... மேலும் பார்க்க

வாய்க்காலில் பாய்ந்த சுமை வாகனம்

திருமருகல் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுமை வாகனம் சாலையோர வாய்க்காலில் பாய்ந்தது. திருவாரூா் மாவட்டம், பூந்தோட்டத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு பால் ஏற்றிச் செல்லும் சுமை ஆட்டோ வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

உயா்கல்வி ஊக்கத் தொகை விழிப்புணா்வு முகாம்: பெற்றோருடன் மாணவா்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம், மே 30: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பிளஸ்2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான உயா்கல்வி ஊக்கத் தொகை விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ப. ஆகாஷ் முகாமை தொடங்கி வைத... மேலும் பார்க்க