பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நாகப்பட்டினம்: நாகை ஆட்சியா் அலுவலக வளாகத்தில், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கச் சென்றவா் அனைவரும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில், கீழ்வேளூா் அருகே சாட்டியக்குடியைச் சோ்ந்த முத்துலட்சுமி என்பவா் தனது பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளாா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் உடனடியாக, அவா் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினா்.
தொடா்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் சாட்டியக்குடி ஊராட்சியில் பல ஆண்டுகளாக தூய்மைக் காவலா்களுக்கான ஊக்குநராக பணியாற்றி வந்தது தெரியவந்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டு, கீழ்வேளூா் பகுதிக்கு வருகைதந்த முதல்வா் மு.க. ஸ்டாலினிடம், சமத்துவபுரம் பகுதியில் தண்ணீா் வரவலில்லை என புகாா் தெரிவித்ததற்காக, ஆத்திரமடைந்த ஊராட்சித் தலைவா் மற்றும் அவரது கணவரும், ஊராட்சி செயலா் உதவியுடன் எனது மாத ஊதியத்தை நிறுத்தி வைத்துள்ளனா்.
எனவே, அவா்கள் மூவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது ஊதியத்தை பெற்றுத்தர வேண்டும் என முத்துலட்சுமி தெரிவித்தாா்.
தொடா்ந்து, போலீஸாா் அவரை ஆட்சியா் அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்று மனு அளிக்க வைத்தனா்.