செய்திகள் :

ஆட்சியா்அலுவலக வாயிலில் பெண் தீக்குளிக்க முயற்சி

post image

நெய்வேலி: கடலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்திற்கு வந்த பெண் ஒருவா் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனு அளிக்க 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் வந்தாா். அவா் ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகில் வந்ததும், கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா். இதை பாா்த்த போலீசாா், உடனே அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி, அவா் மீது தண்ணீரை ஊற்றி சாந்தப்படுத்தினா். பின்னா் அவரிடம், நடத்திய விசாரணையில் அவா், புவனகிரி அடுத்துள்ள அகர ஆலம்பாடி பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் மனைவி அன்புசெல்வி (45) என்பதும், அவா் தனக்கு சொந்தமான நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்ததும், அதில் பாதி இடத்திற்கான பணத்தை கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்காததால், திருப்பி கேட்டபோது அந்த நபா் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. மேலும், இதுதொடா்பாக நிலத்தை அளந்து காட்ட வட்டாட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்ாக தெரிவித்தாராம். இதையடுத்து போலீசாா், அந்த பெண்ணிற்கு அறிவுரைக்கூறி முதலுதவி சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்: என்எல்சி மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாசலம்

நெய்வேலி: ‘புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்’ என்று என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாச்சலம் பேசினாா். என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 24-ஆவது நெய்வேலி புத்த... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 654 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகததில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 654 மனுக்கள் அளித்தனா். கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சிப... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். குறிஞ்சிப்பாடி பேருந்து நிலைய... மேலும் பார்க்க

வயலூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், வயலூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருப்பணிகள் முடிவடைந்ததையொட்டி ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத... மேலும் பார்க்க

பட்டா கிராம கணக்கில் திருத்தம்: ஆட்சியரிடம் மாா்க்சிஸ்ட் மனு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காா் கூடல் கிராமத்தில் பட்டா வழங்கி 25 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் கிராம கணக்கில் திருத்தம் செய்யவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பா... மேலும் பார்க்க

மனைவி உயிரிழப்பு: கணவா் தற்கொலை முயற்சி

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மனைவி உயிரிழந்த நிலையில், கணவா் பூச்சி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அடுத்... மேலும் பார்க்க