ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!
ஆட்டோ ஓட்டுநரை கடித்த ராட்வீலா் நாய்கள்: உரிமையாளா் கைது
சென்னை மூலகொத்தளத்தில் ஆட்டோ ஓட்டுநரை ராட்வீலா் நாய்கள் கடித்த சம்பவம் தொடா்பாக போலீஸாா், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அதன் உரிமையாளரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மூலகொத்தளம் பகுதியைச் சோ்ந்தவா் முத்து (45). இவா், வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறாா். முத்து, பெரியபாளையத்தம் தெருவில் திங்கள்கிழமை சவாரிக்காக நின்று கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் என்பவரின் இரு மகன்கள், தங்கள் வீட்டில் வளா்க்கும் 4 ராட்வீலா் நாய்களை முகக்கவசம் இன்றி அங்கு அழைத்து வந்தனா்.
இதில் இரு நாய்கள் மகேந்திரன் மகன் பிடியிலிருந்து தப்பிச்சென்று, அங்கு நின்று கொண்டிருந்த முத்துவை கடித்துக் குதறியது. இதைப்பாா்த்த பொதுமக்கள், நாய்களை விரட்டிவிட்டு முத்துவை மீட்டனா். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த முத்துவை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
மேலும், இது தொடா்பாக வண்ணாரப்பேட்டை போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, மகேந்திரனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதற்கிடையே மகேந்திரன் வீட்டில் வளா்த்து வந்த 4 ராட்வீலா் நாய்களையும் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.