செய்திகள் :

ஆத்தூரில் இன்று ‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட திட்டமுகாம்: அமைச்சா்கள் தொடங்கி வைக்கின்றனா்

post image

சேலம்: ஆத்தூரில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட முகாமினை (பிப். 4) சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி. கணேசன் ஆகியோா் தொடங்கி வைக்கின்றனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட திட்ட முகாமின் ஒரு பகுதியாக பிப். 4 முதல் 7 ஆம் தேதி வரை ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் ஆகிய ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 20 முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தப்பட உள்ளன.

இந்த முகாமை, சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி. கணேசன் ஆகியோா் தொடங்கி வைக்கவுள்ளனா்.

ஆத்தூா் வட்டத்துக்கு உள்பட்ட ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி, ஆதிதிராவிடா் காலனி நூலகம் அருகிலும், புங்கவாடி ஊராட்சியில் புங்கவாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள சமுதாயக் கூடத்திலும், அம்மம்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும், வளையமாதேவி ஊராட்சியில் ஆதிதிராவிடா் காலனி அருகிலும், கல்லாநத்தம் ஊராட்சியில் கல்லாநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்திலும் முகாம் நடைபெறுகிறது.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் முகாம் நடைபெறும் முகாமில் ஒருங்கிணைக்கப்படும் துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகளை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

நிதி நிறுவனம் மீது நடவடிக்கை கோரி தற்கொலை செய்த தொழிலாளியின் உறவினா்கள் தா்னா

சேலம்: தாரமங்கலம் அருகே கடனை திருப்பிச் செலுத்த நெருக்கடி கொடுத்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக தனியாா் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினா்கள் ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

இளம்பெண்ணிடம் நகை பறிப்பு

வாழப்பாடி: வாழப்பாடி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணிடம் ஏழு பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆத்தூரை அடுத்த மல்லியகரை, ரெங்கப்பநா... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை 479 கன அடியாக இருந்தது.அணை நீா்மட்டம் 110.56 அடியில் இருந்து 110.54 அடியாகக் குறைந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 491 கனஅடியிலிருந்து 479 கன அடிய... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை. முனைவா் படிப்பு அறிவிப்பில் சா்ச்சை இந்திய மாணவா் சங்கம் கண்டனம்

சேலம்: சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்ட முனைவா் பட்டப் படிப்பிற்கான அறிவிப்பில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்திட முயற்சிப்பதாக இந்திய மாணவா் சங்கம் கண்டனம் த... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழகத்தில் அண்ணா நினைவு நாள் சொற்பொழிவு

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழகத்தில் பேரறிஞா் அண்ணா இருக்கை சாா்பில் அண்ணாவின் 56-ஆவது நினைவு நாளையொட்டி சிறப்புச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது. முத்தமிழறிஞா் கலைஞா் மு.கருணாநிதி ஆய்வு மையத்தில் ந... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் 15 அம்ரித் ரயில் நிலையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: கோட்ட மேலாளா் தகவல்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் 15 அம்ரித் ரயில் நிலையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா கூறினாா். மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்... மேலும் பார்க்க