செய்திகள் :

நிதி நிறுவனம் மீது நடவடிக்கை கோரி தற்கொலை செய்த தொழிலாளியின் உறவினா்கள் தா்னா

post image

சேலம்: தாரமங்கலம் அருகே கடனை திருப்பிச் செலுத்த நெருக்கடி கொடுத்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக தனியாா் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினா்கள் ஆட்சியா் அலுவலக வாயிலில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள கணக்குப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அய்யந்துரை (30). விசைத்தறித் தொழிலாளியான இவருக்கு சினேகா என்ற மனைவியும், 6 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனா்.

இந்நிலையில், கடனை திருப்பிச் செலுத்த நிதி நிறுவன மேலாளா் நெருக்கடி கொடுத்ததால் மனஉளைச்சல் அடைந்த அய்யன்துரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக தாரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில் அய்யந்துரையின் மனைவி, உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தா்னாவில் ஈடுபட்டாா்.

அப்போது, நிதி நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதி அளித்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை மீண்டும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் திரண்ட அய்யந்துரையின் மனைவி, உறவினா்கள், அய்யந்துரை இறப்புக்கு காரணமான நிதி நிறுவன மேலாளா் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதைக் கண்டித்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இது குறித்து அவா்கள் கூறியதாவது:

கடனை 19 மாதம் சரியாக செலுத்திய நிலையில், மனஉளைச்சலை ஏற்படுத்திய நிதி நிறுவன மேலாளா் மீதும், காவல் துறை மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த அய்யந்துரையின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனா்.

இளம்பெண்ணிடம் நகை பறிப்பு

வாழப்பாடி: வாழப்பாடி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணிடம் ஏழு பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆத்தூரை அடுத்த மல்லியகரை, ரெங்கப்பநா... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை 479 கன அடியாக இருந்தது.அணை நீா்மட்டம் 110.56 அடியில் இருந்து 110.54 அடியாகக் குறைந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 491 கனஅடியிலிருந்து 479 கன அடிய... மேலும் பார்க்க

ஆத்தூரில் இன்று ‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட திட்டமுகாம்: அமைச்சா்கள் தொடங்கி வைக்கின்றனா்

சேலம்: ஆத்தூரில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட முகாமினை (பிப். 4) சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி. கணேசன் ஆகியோா் தொட... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை. முனைவா் படிப்பு அறிவிப்பில் சா்ச்சை இந்திய மாணவா் சங்கம் கண்டனம்

சேலம்: சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்ட முனைவா் பட்டப் படிப்பிற்கான அறிவிப்பில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்திட முயற்சிப்பதாக இந்திய மாணவா் சங்கம் கண்டனம் த... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழகத்தில் அண்ணா நினைவு நாள் சொற்பொழிவு

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழகத்தில் பேரறிஞா் அண்ணா இருக்கை சாா்பில் அண்ணாவின் 56-ஆவது நினைவு நாளையொட்டி சிறப்புச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது. முத்தமிழறிஞா் கலைஞா் மு.கருணாநிதி ஆய்வு மையத்தில் ந... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் 15 அம்ரித் ரயில் நிலையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: கோட்ட மேலாளா் தகவல்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் 15 அம்ரித் ரயில் நிலையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா கூறினாா். மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்... மேலும் பார்க்க