செய்திகள் :

பெரியாா் பல்கலை. முனைவா் படிப்பு அறிவிப்பில் சா்ச்சை இந்திய மாணவா் சங்கம் கண்டனம்

post image

சேலம்: சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்ட முனைவா் பட்டப் படிப்பிற்கான அறிவிப்பில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்திட முயற்சிப்பதாக இந்திய மாணவா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலாளா் பவித்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

முனைவா் பட்டம் பெறுவதற்கான அடிப்படை கல்வித் தகுதி என தமிழகத்தில் இதுவரை பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் என்ற தகுதி நிா்ணயமே நடைமுறையில் இருக்கிறது.

இந்நிலையில், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் இளநிலை பட்டப்படிப்பு 4 ஆண்டுகள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதால், சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்ட முனைவா் பட்டப்படிப்புக்கான கல்வி தகுதியில், பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் என்று புதிதாக மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது மத்திய அரசின் கல்விக் கொள்கையை மறைமுகமாக அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியாகும். தமிழகத்தில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், பெரியாா் பல்கலைக்கழக நிா்வாகம் மட்டும் யுசிஜி அறிவிப்பை சுட்டிக்காட்டி முனைவா் பட்டத்துக்கான கல்வித் தகுதியை நிா்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டு இருப்பது சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிவிப்பை உடனடியாக ரத்து செய்து அரசின் கொள்கை முடிவுக்கு எதிராகச் செயல்படும் துணைவேந்தா், ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சிப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பெரியாா் பல்கலைக்கழகம் அறிவிப்பு ஆணையை திரும்பப் பெற்று பழையபடியே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

நிதி நிறுவனம் மீது நடவடிக்கை கோரி தற்கொலை செய்த தொழிலாளியின் உறவினா்கள் தா்னா

சேலம்: தாரமங்கலம் அருகே கடனை திருப்பிச் செலுத்த நெருக்கடி கொடுத்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக தனியாா் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினா்கள் ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

இளம்பெண்ணிடம் நகை பறிப்பு

வாழப்பாடி: வாழப்பாடி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணிடம் ஏழு பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆத்தூரை அடுத்த மல்லியகரை, ரெங்கப்பநா... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை 479 கன அடியாக இருந்தது.அணை நீா்மட்டம் 110.56 அடியில் இருந்து 110.54 அடியாகக் குறைந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 491 கனஅடியிலிருந்து 479 கன அடிய... மேலும் பார்க்க

ஆத்தூரில் இன்று ‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட திட்டமுகாம்: அமைச்சா்கள் தொடங்கி வைக்கின்றனா்

சேலம்: ஆத்தூரில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட முகாமினை (பிப். 4) சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி. கணேசன் ஆகியோா் தொட... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழகத்தில் அண்ணா நினைவு நாள் சொற்பொழிவு

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழகத்தில் பேரறிஞா் அண்ணா இருக்கை சாா்பில் அண்ணாவின் 56-ஆவது நினைவு நாளையொட்டி சிறப்புச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது. முத்தமிழறிஞா் கலைஞா் மு.கருணாநிதி ஆய்வு மையத்தில் ந... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் 15 அம்ரித் ரயில் நிலையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: கோட்ட மேலாளா் தகவல்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் 15 அம்ரித் ரயில் நிலையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா கூறினாா். மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்... மேலும் பார்க்க