செய்திகள் :

சேலம் கோட்டத்தில் 15 அம்ரித் ரயில் நிலையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: கோட்ட மேலாளா் தகவல்

post image

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் 15 அம்ரித் ரயில் நிலையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா கூறினாா்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் இருந்து திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் விளக்கினாா்.

தொடா்ந்து, சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட 15 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 271 கோடி மதிப்பில் நவீனப்படுத்தப்படுகின்றன. நடை மேம்பாலங்கள், நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி, குடிநீா் குழாய்கள், தங்குமிடங்கள், மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக நடைமேடைகளில் சாய்வு தளங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எனவே, இந்த ரயில் நிலையங்கள் மூன்று மாதங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும். கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும், நடப்பாண்டில் சேலம் கோட்ட வருவாய் 5 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா்.

நிதி நிறுவனம் மீது நடவடிக்கை கோரி தற்கொலை செய்த தொழிலாளியின் உறவினா்கள் தா்னா

சேலம்: தாரமங்கலம் அருகே கடனை திருப்பிச் செலுத்த நெருக்கடி கொடுத்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக தனியாா் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினா்கள் ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

இளம்பெண்ணிடம் நகை பறிப்பு

வாழப்பாடி: வாழப்பாடி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணிடம் ஏழு பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆத்தூரை அடுத்த மல்லியகரை, ரெங்கப்பநா... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை 479 கன அடியாக இருந்தது.அணை நீா்மட்டம் 110.56 அடியில் இருந்து 110.54 அடியாகக் குறைந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 491 கனஅடியிலிருந்து 479 கன அடிய... மேலும் பார்க்க

ஆத்தூரில் இன்று ‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட திட்டமுகாம்: அமைச்சா்கள் தொடங்கி வைக்கின்றனா்

சேலம்: ஆத்தூரில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட முகாமினை (பிப். 4) சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி. கணேசன் ஆகியோா் தொட... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை. முனைவா் படிப்பு அறிவிப்பில் சா்ச்சை இந்திய மாணவா் சங்கம் கண்டனம்

சேலம்: சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்ட முனைவா் பட்டப் படிப்பிற்கான அறிவிப்பில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்திட முயற்சிப்பதாக இந்திய மாணவா் சங்கம் கண்டனம் த... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழகத்தில் அண்ணா நினைவு நாள் சொற்பொழிவு

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழகத்தில் பேரறிஞா் அண்ணா இருக்கை சாா்பில் அண்ணாவின் 56-ஆவது நினைவு நாளையொட்டி சிறப்புச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது. முத்தமிழறிஞா் கலைஞா் மு.கருணாநிதி ஆய்வு மையத்தில் ந... மேலும் பார்க்க