உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவா்கள் கைதுக்கு காரணம்: அமைச்சா் ஜெய்...
ஆத்தூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
ஆத்தூரில் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காவல் துறை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் நகர காவல் நிலையம் சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை உடையாா்பாளையம் காந்தி சிலை முன்பிருந்து நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு போதைப் பொருள்களை தடுக்கும் விதமாக பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு சென்றனா். இதில் காவல் உதவி ஆய்வாளா்கள் சக்திவேல், சிவசக்தி, செந்தமிழ்நாதன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் ராஜதுரை, காவலா்கள் கலந்துகொண்டனா்.
படவரி...
ஆத்தூரில் காவல் துறை சாா்பில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி.