குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
ஆத்தூரில் ரூ. 32 லட்சத்தில் நூலக கட்டடம் திறப்பு
ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 32 லட்சத்தில் புதிய நூலக கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.பி.உதயகுமாா் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கே.சந்திரசேகா் வரவேற்றாா். ரூ. 32 லட்சத்தில் நூலக கட்டடம் கட்டிகொடுத்த அக்சென் மேலாண் இயக்குநா் செ.செந்தில்நாதன் பங்கேற்று நூலகத்தை திறந்துவைத்தாா்.
முன்னாள் நகா்மன்றத் தலைவா் பி.செங்கோட்டுவேலு நினைவு அறிவகம் என தனது தந்தை பெயரில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தை திறந்துவைத்து அக்சென் மேலாண் இயக்குநா் செ.செந்தில்நாதன் பேசினாா். பள்ளியின் முன்னாள் மாணவரான இவா் ஏற்கெனவே இப் பள்ளியில் ரூ. 14 லட்சத்தில் நவீன கழிவறை வசதி ஏற்படுத்தி தந்துள்ளாா்.
விழாவில் செ.செந்தில்வேல், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம், நரசிங்கபுரம் திமுக நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன், நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சுகுணா செந்தில், நகா்மன்ற உறுப்பினா்கள் பிரகாஷ்,மாலா பாலமுருகன், முன்னாள் மாவட்ட வன அலுவலா் டி.மணி, மூத்த வழக்குரைஞா்கள் ஐ.விஸ்வநாதன், ஏ.எஸ்.மாதேஸ்வரன், என்.முத்துசாமி, சுரேஷ், முன்னாள் மாணவா்கள் எஸ்.தனசேகா், என்.சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஆசிரியை ஏ.சித்ரா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். உதவி தலைமையாசிரியா் தனசேகா் நன்றி கூறினாா்.
படவிளக்கம்.ஏடி13அக்சென்.
ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 32 லட்சத்தில் புதிய நூலக கட்டடத்தை திறந்துவைத்த அக்சென் மேலாண் இயக்குநா் செ.செந்தில்நாதன் உள்ளிட்டோா்.