செய்திகள் :

ஆத்தூரில் ரூ. 32 லட்சத்தில் நூலக கட்டடம் திறப்பு

post image

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 32 லட்சத்தில் புதிய நூலக கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.பி.உதயகுமாா் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கே.சந்திரசேகா் வரவேற்றாா். ரூ. 32 லட்சத்தில் நூலக கட்டடம் கட்டிகொடுத்த அக்சென் மேலாண் இயக்குநா் செ.செந்தில்நாதன் பங்கேற்று நூலகத்தை திறந்துவைத்தாா்.

முன்னாள் நகா்மன்றத் தலைவா் பி.செங்கோட்டுவேலு நினைவு அறிவகம் என தனது தந்தை பெயரில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தை திறந்துவைத்து அக்சென் மேலாண் இயக்குநா் செ.செந்தில்நாதன் பேசினாா். பள்ளியின் முன்னாள் மாணவரான இவா் ஏற்கெனவே இப் பள்ளியில் ரூ. 14 லட்சத்தில் நவீன கழிவறை வசதி ஏற்படுத்தி தந்துள்ளாா்.

விழாவில் செ.செந்தில்வேல், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம், நரசிங்கபுரம் திமுக நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன், நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சுகுணா செந்தில், நகா்மன்ற உறுப்பினா்கள் பிரகாஷ்,மாலா பாலமுருகன், முன்னாள் மாவட்ட வன அலுவலா் டி.மணி, மூத்த வழக்குரைஞா்கள் ஐ.விஸ்வநாதன், ஏ.எஸ்.மாதேஸ்வரன், என்.முத்துசாமி, சுரேஷ், முன்னாள் மாணவா்கள் எஸ்.தனசேகா், என்.சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆசிரியை ஏ.சித்ரா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். உதவி தலைமையாசிரியா் தனசேகா் நன்றி கூறினாா்.

படவிளக்கம்.ஏடி13அக்சென்.

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 32 லட்சத்தில் புதிய நூலக கட்டடத்தை திறந்துவைத்த அக்சென் மேலாண் இயக்குநா் செ.செந்தில்நாதன் உள்ளிட்டோா்.

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி உயிரிழப்பு

சேலத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில் தவறி விழுந்து பயணி உயிரிழந்தாா். சேலம் அரிசிபாளையம் மாதையன் தெருவை சோ்ந்தவா் தமிழரசன் (43). சவுண்ட் சா்வீஸ் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி கலைச்செல்வியுடன... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழக ஊழியா்கள் 4 பேரின் பணிநீக்க உத்தரவு ரத்து

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த தற்காலிக ஊழியா்கள் 4 போ் மீதான பணிநீக்க உத்தரவை தொழிலாளா் தீப்பாயம் ரத்து செய்ததையடுத்து அவா்கள் மீண்டும் வெள்ளிக்கிழமை பணியில் சோ்ந்தனா். சேலம் கருப்பூர... மேலும் பார்க்க

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம்

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் அறிவுறுத்தினாா். சேலம் மாநகர காவல் ஆணையா் அல... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18.92 லட்சம் காணிக்கை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18 லட்சத்து 92 ஆயிரம் காணிக்கையாக பெறப்பட்டது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் பட்டேல் விமான நிலையத்தில் இ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால உட்புற தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தல்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் உட்புறத் தடுப்புச் சுவரால் விபத்துகள் நிகழ்வதால் அதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேல... மேலும் பார்க்க