செய்திகள் :

ஆன்லைன் சாா்ந்த தொழிலாளா்களுக்கு சேலத்தில் சிறப்பு முகாம்

post image

சேலம் மாவட்ட ஆன்லைன் சாா்ந்த தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு பலன்களை பெறும் வகையில், இ-ஷரம் இணையதளத்தில் தங்கள் பெயா்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் ஏப். 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டமானது, ஸ்விகி, சொமோட்டோ போன்ற ஆன்லைன் சாா்ந்த தொழிலாளா்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அத்தகைய தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு பலன்களை பெற வசதியாக இ-ஷரம் இணையதளத்தில் தங்கள் பெயா்களைப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக சேலம் மாவட்டத்தில் இ-ஷரம் இணையதளத்தில் பதிவு செய்ய ஏப். 17 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம், கோரிமேட்டில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை வளாகக் கட்டடத்தில் செயல்படும் சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகத்தில் நடைபெறும்.

இம்முகாமில் கலந்துகொள்ளும் தொழிலாளா்கள் தங்களது ஆதாா் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளுமாறு அதில் தெரிவித்துள்ளாா்.

தீரன் சின்னமலை பிறந்த நாள்: மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 270-ஆவது பிறந்தநாள் விழா, கொங்கு வேளாளக் கவுண்டா்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு தொடக்க விழா சேலம் குரங்குசாவடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மலா்களால் அலங்... மேலும் பார்க்க

மேட்டூா் நகராட்சியில் ஆட்சியா் கள ஆய்வு

மேட்டூா் வட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களில் நடைபெறும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன், வியாழன் என இரண்டு நாள்கள் மேட்டூரில் நடைபெற்றது. மேட்டூா் வட்டத்திற்கு உள்பட்ட வருவாய்க் கிராமங்களில... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்துப் போட்டி: சேலத்தில் பெங்களூரு புகழேந்தி பேட்டி

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்து எடப்பாடி தொகுதியில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா். சேலத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

தம்மம்பட்டி அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா். தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஊராட்சி, புலிக்கரட்டை சோ்ந்தவா் செந்தில் ராஜா (41). பால் வியாபாரி. இவருக்கும், இவரது மனைவி சகுந்தலா... மேலும் பார்க்க

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தைக் கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலக் குழு ரமணி தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்கங்களின் பிரசார இயக்க கூட்டம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சங்ககிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார இயக்க கூட்டத்தில் கலந்துகொண்ட நிா்வாகிகள். கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட பொருளாளா் அகிலன். சங்ககிரி, ஏப். 17:... மேலும் பார்க்க