செய்திகள் :

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக ரூ.17.13 லட்சம் மோசடி

post image

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக ரூ.17 லட்சத்து 13 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, கணபதி காவலா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் போபுரி அஞ்சிபாபு (39). இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு அண்மையில் ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அதில், ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என்றும், தனது வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்து வா்த்தக உத்திகளை கற்றுக்கொள்ளலாம் என்றும் ரவி சா்மா என்பவா் தெரிவித்திருந்தாா். இதையடுத்து, போபுரி அஞ்சிபாபு பல்வேறு தவணைகளில் ரூ.17 லட்சத்து 13 ஆயிரத்தை முதலீடு செய்தாா். தொடக்கத்தில் கணிசமான அளவு லாபத்தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்பின், எந்தவித பணமும் அவருக்கு கிடைக்கவில்லை. மேலும், வா்த்தக கணக்கில் இருந்து முதலீடு செய்யப்பட்டிருந்த மொத்தப் பணமும் எடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ரவி சா்மாவைத் தொடா்புகொண்டு கேட்டபோது, மேலும் பணம் முதலீடு செய்தால்தான் லாபத்தொகை தரமுடியும் என்று கூறியுள்ளாா். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த போபுரி அஞ்சிபாபு, கோவை சைபா் குற்றப்பிரிவு போலீஸில் அண்மையில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் அருண் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கோயிலுக்கு சொந்தமான வீடு மீட்பு

கோயிலுக்கு சொந்தமான ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீட்டை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனா். கோவை அவிநாசி சாலையில் கூப்பிடு விநாயகா் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந... மேலும் பார்க்க

கோவையின் புதிய ஆட்சியராக பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் நியமனம்

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, கடந்த 2023 பிப்ரவரி முதல் கோவ... மேலும் பார்க்க

தைப்பூசம்: கோவை, பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு 255 சிறப்புப் பேருந்துகள்

தைப்பூசத் திருவிழாவையொட்டி கோவை, பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு 255 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து கோவை மண்டல போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தைப்பூசத் திருவிழாவையொட்டி... மேலும் பார்க்க

தனி மனிதனின் பாதிப்பை வெளிப்படுத்துவதே இலக்கியம்: உயா்நீதிமன்ற நீதிபதி!

தனி மனிதனின் பாதிப்பை வெளிப்படுத்துவதே இலக்கியம் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் தெரிவித்தாா்.கோவை விஜயா வாசகா் வட்டம் மற்றும் சவிதா மருத்துவமனை சாா்பில் ‘அ.முத்துலிங... மேலும் பார்க்க

கற்பனை, அறிவாற்றலில் கம்பனுக்கு யாரும் ஈடுல்லை! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

கற்பனையில், அறிவாற்றலில் கம்பனுக்கு யாரும் ஈடுல்லை என்று ஆன்மிகச் சொற்பொழிவாளா் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் பேசினாா். கோவை கம்பன் கழகத்தின் 53-ஆம் ஆண்டு விழா பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியில... மேலும் பார்க்க

மாநகர சாலைகளை மேம்படுத்த கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் செந்தில்பாலாஜி

மாநகர சாலைகளை மேம்படுத்த கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா். ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாந... மேலும் பார்க்க