செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் வான்வழித் தடம் மூடல்!

post image

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களினால் அந்நாட்டின் வான்வழித் தடம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளின் மீது செவ்வாய்க்கிழமை (மே.7) நள்ளிரவு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் அதிரடியான தாக்குதல்களை நடத்தியது.

இந்தியாவின் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமபாத் மற்றும் லாஹூர் ஆகிய பகுதிகளின் வான்வழித் தடம் மூடப்படுவதாக அந்நாட்டின் விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், அங்கு செல்ல வேண்டிய விமானங்கள் அனைத்தும் கராச்சி விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் மொத்த வான்வழித் தடமும் 48 மணிநேரத்துக்கு மூடப்படுவதாக இன்று (மே.7) பாகிஸ்தான் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், சுமார் 8 மணி நேரத்துக்கு பின் வான்வழித் தடம் மீண்டும் திறக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்கள் அனைத்தும் கராச்சி மற்றும் லாஹூரிலுள்ள விமான நிலையங்கள் மூலமாகவே பெரும்பாலும் இயக்கப்பட்டன. ஆனால், லாஹூரின் வான்வழித் தடம் மீண்டும் 24 மணி நேரத்துக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, பாகிஸ்தானின் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், மேற்கு ஆசிய நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் உள்ளிட்ட அனைத்து விமானங்களும் தற்போது முழுவதுமாக இயக்கப்படுவதாகவும் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரையில் உள்நாட்டு விமானங்களும் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்களின் மீது இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்திய - பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம்: அமெரிக்கா அறிவுறுத்தல்!

‘எங்களின் நம்பிக்கையைப் பிரதமா் காப்பாற்றியுள்ளாா்’ -பஹல்காமில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் கருத்து

‘பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைத் தாக்கி, அழித்த ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் அரசு மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை பிரதமா் நரேந்திர மோடி காப்பாற்றியுள்ளாா்’ என்று பஹல்காம் தாக்குதலில் உய... மேலும் பார்க்க

பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் ரத்து

‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவும் சூழலில், மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கான பிரதமா் மோடியின் அரசுமுறைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குரேச... மேலும் பார்க்க

எல்லையில் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதல்: 13 போ் உயிரிழப்பு -இந்தியா பதிலடி

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினா் சிறிய ரக பீரங்கிகள் மற்றும... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சங்கல்ப்’: சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ‘ஆபரேஷன் சங்கல்ப்’ நடவடிக்கையின்போது, பிஜபூரில் புதன்கிழமை 22 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களுடன் சோ்த்து, இந்த நடவடிக்கையில் இதுவரை கொ... மேலும் பார்க்க

நிலவில் இந்திய விண்வெளி வீரா்கள் தடம் பதிப்பா்: பிரதமா் நம்பிக்கை

‘விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியா புதிய நம்பிக்கையுடன் பீடு நடை போடுகிறது; 2040-ஆம் ஆண்டுக்குள் நிலவில் இந்திய விஞ்ஞானிகள் கால்தடம் பதிப்பா்’ என்று பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்தாா். உலக விண்வெளி ... மேலும் பார்க்க

‘ஆப்பரேஷன் சிந்தூா்’: தகா்க்கப்பட்ட 9 பயங்கரவாத கட்டமைப்புகள்

‘ஆப்பரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள 4 பயங்கரவாத நிலைகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாத நிலைகளை விரிவான உளவுத் தகவல்களின் அடிப்படையில் துல்லியமாக தோ... மேலும் பார்க்க