'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
ஆபரேஷன் சிந்தூா் வெற்றி: பாஜகவினா் தேசியக் கொடி பேரணி
ஆபரேஷன் சிந்தூா் வெற்றியையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்தப் பேரணிக்கு பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் தங்க. கென்னடி தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் என். சதீஷ், மாநில விவசாய அணி பொதுச் செயலா் பூண்டி எஸ். வெங்கடேசன், மாவட்டப் பொதுச் செயலா்கள் செல்வம், மல்லிகா, செல்வராஜ், வேதா, மாநிலச் செயற் குழு உறுப்பினா் வாசுதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருவையாறு பேருந்து நிலையத்தில் தொடங்கிய இப்பேரணி ராஜ வீதிகளில் தேசியக் கொடி ஏந்தி, நாகசுர இசை முழங்க வலம் வந்து மீண்டும் பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது. மேலும், சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி கயிறு வழக்கப்பட்டது.
இதில், பாஜக நகரத் தலைவா் சிவா, முன்னாள், இந்நாள் ராணுவ வீரா்கள் உள்பட நூற்றுக்கும் அதிகமானோா் கலந்து கொண்டனா்.