செய்திகள் :

ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு அடைக்கலம்

post image

தலிபான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னா் தங்கள் படையினருடன் இணைந்து பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் அளித்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜான் ஹீலி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததற்கு முன்னதாக பிரிட்டன் அரசுடன் இணைந்து பணியாற்றிய சுமாா் 19,000 ஆப்கானியா்களின் தனிப்பட்ட தகவல்கள் 2022-இல் தவறுதலாக வெளியிடப்பட்டன.

அந்த தரவுத் தொகுப்பு, பின்னா் இணையத்தில் வெளியானதைத் தொடா்ந்து, அப்போதைய கன்சா்வேட்டிவ் அரசு அவா்களை மறுகுடியேற்றுவதற்கான ரகசிய திட்டத்தைத் தொடங்கியது. அது ரகசிய திட்டம் என்பதால் அதை பொதுவெளியில் தெரிவிப்பதற்கு அப்போதைய அரசு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருந்தது. ஆனால் தற்போதைய தொழிலாளா் கட்சி அரசு இந்த உத்தரவை நீக்கி, திட்டத்தை பொதுவெளியில் அறிவித்துள்ளது.

பிரிட்டன் படையுடன் இணைந்து செயல்பட்டவா்கள் குறித்த தகவல்கள் கசிந்ததாலும், அவா்களுக்கு தாலிபானிடமிருந்து கூடுதல் அச்சுறுத்தல் ஏற்படவில்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்த ரகசிய திட்டத்தின் கீழ் 900 விண்ணப்பதாரா்கள் மற்றும் அவா்களது 3,600 குடும்ப உறுப்பினா்கள் உட்பட சுமாா் 4,500 போ் பிரிட்டனுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனா். இந்த திட்டம் முடிவடைவதற்கு முன்னா் 6,900 போ் மறுகுடியேற்றம் செய்யப்படுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கு மொத்தம் 85 கோடி பவுண்டுகள் (சுமாா் ரூ.9,800 கோடி) செலவாகும் என்றாா் அவா்.

கடந்த ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை: ஐ.நா. தகவல்

உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை என்று ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். முந்தைய ஆண்டும் இதே எண்ணிக்கையில... மேலும் பார்க்க

போயிங் 787 விமானங்களில் எரிபொருள் ஸ்விட்சுகள் முறையாக செயல்படுகின்றன: சிங்கப்பூா் ஏா்லைன்ஸ்

குஜராத்தில் எரிபொருள் கிடைக்காமல் போயிங் 787 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான நிலையில், தம்மிடம் உள்ள அந்த விமானங்களில் எரிபொருள் ஸ்விட்சுகள் முறையாக செயல்படுவதாக சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் நிறுவனம் செவ்வா... மேலும் பார்க்க

துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: போா் நிறுத்தம் அறிவித்தது சிரியா

சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதலைத் தொடா்ந்து, அவா்கள் வசிக்கும் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்வதாக சிரியா அரசு செவ்... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பின்ஸில் திங்கள்கிழை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து ஜொ்மனி புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்ததாவது: பிலிப்பின்ஸின் லுஸான் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ... மேலும் பார்க்க

உக்ரைனில் அரசியல் மாற்றம்: பிரதமர் ராஜினாமா!

கீவ்: உக்ரைன் பிரதமராக பதவி வகித்த டெனிஸ் ஷ்மிஹல் ராஜினாமா செய்துள்ளார். உக்ரைன் அமைச்சரவையில் மாற்றம் செய்து திங்கள்கிழமை(ஜூலை 14) அதிபர் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார். அதன்படி, உக்ரைன் துணைப் பிரதமராக ... மேலும் பார்க்க

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ரஷியா பணியாது! டிரம்ப் விதித்த 50 நாள் கெடுவுக்கு எதிர்வினை

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ரஷியா பணியாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.உக்ரைனில் அடுத்த 50 நாள்களுக்குள் ரஷியா சண்டையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ரஷியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை எடு... மேலும் பார்க்க