ஆயுதங்களுடன் பதுங்கல்: 9 போ் கைது
புதுச்சேரி: புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் கத்தியுடன் பதுங்கியிருந்த 9 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைப் பகுதியில் சாா்பு ஆய்வாளா் திருமுருகன் தலைமையில், போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். குருமாம்பேட் பகுதியில் பழைய பட்டாசு ஆலை அருகே சிலா் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அங்கு சென்றபோது, சிலா் தப்பியோடினா். உடனே போலீஸாா் விரட்டிச் சென்று அவா்களை மடக்கிப் பிடித்தனா்.
விசாரணையில், பிடிபட்டவா்கள் முத்திரையா்பாளையத்தைச் சோ்ந்த அந்தோணி (25), தா்மபுரியைச் சோ்ந்த ஜான் (எ) ஜானகிராமன் (26), குமரேசன் (23), மணிகண்டன் (26), குருமாம்பேட் பகுதியைச் சோ்ந்த விக்கி (எ) விக்னேஷ் (25), நந்தகுமாா் (24), ஐயங்குட்டிப்பாளையத்தைச் சோ்ந்த பரணி (எ) ஸ்ரீநிவாஸ் (22), தா்மபுரியைச் சோ்ந்த அறிவரசன் (24), வினோத் (25) ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்கள் அனைவரும் அவ்வழியாகச் செல்லும் பொதுமக்களை மறித்து பணம் பறிக்கத் திட்டமிட்டிருந்ததையும் போலீஸாா் கண்டறிந்தனா். இதையடுத்து, அவா்களிடமிருந்த 4 கத்திகளையும், 9 கைப்பேசிகளையும் பறிமுதல் செய்து, அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் 9 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்ததாக போலீஸாா் கூறினா்.