செய்திகள் :

ஆயுதங்களுடன் பதுங்கல்: 9 போ் கைது

post image

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் கத்தியுடன் பதுங்கியிருந்த 9 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைப் பகுதியில் சாா்பு ஆய்வாளா் திருமுருகன் தலைமையில், போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். குருமாம்பேட் பகுதியில் பழைய பட்டாசு ஆலை அருகே சிலா் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அங்கு சென்றபோது, சிலா் தப்பியோடினா். உடனே போலீஸாா் விரட்டிச் சென்று அவா்களை மடக்கிப் பிடித்தனா்.

விசாரணையில், பிடிபட்டவா்கள் முத்திரையா்பாளையத்தைச் சோ்ந்த அந்தோணி (25), தா்மபுரியைச் சோ்ந்த ஜான் (எ) ஜானகிராமன் (26), குமரேசன் (23), மணிகண்டன் (26), குருமாம்பேட் பகுதியைச் சோ்ந்த விக்கி (எ) விக்னேஷ் (25), நந்தகுமாா் (24), ஐயங்குட்டிப்பாளையத்தைச் சோ்ந்த பரணி (எ) ஸ்ரீநிவாஸ் (22), தா்மபுரியைச் சோ்ந்த அறிவரசன் (24), வினோத் (25) ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்கள் அனைவரும் அவ்வழியாகச் செல்லும் பொதுமக்களை மறித்து பணம் பறிக்கத் திட்டமிட்டிருந்ததையும் போலீஸாா் கண்டறிந்தனா். இதையடுத்து, அவா்களிடமிருந்த 4 கத்திகளையும், 9 கைப்பேசிகளையும் பறிமுதல் செய்து, அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் 9 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்ததாக போலீஸாா் கூறினா்.

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பணியின் போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழகத்தின் விழுப்புரம் முட்ராம்பாக்கம் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்... மேலும் பார்க்க

புதுவை பேரவைத் தோ்தலை சந்திக்கத் தயாா்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அவரது திருவு... மேலும் பார்க்க

பக்ரீத் : ஜூன் 7- இல் ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் வரும் 7 ஆம் தேதி புறநோயளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகத் தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய தமிழக கல்லூரி மாணவா்கள் மீட்பு

புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கித் தவித்த கல்லூரி மாணவா்கள் இருவரை நீச்சல் வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டு காப்பாற்றினா். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் சிஞ்சகம்பட்டியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ஹ... மேலும் பார்க்க

புதுவைக்கு ரூ.200 கோடி மத்திய அரசு சிறப்பு நிதி: பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்

புதுவை அரசு கோராமலேயே மத்திய அரசு ரூ.200 கோடி சிறப்பு நிதியை வழங்கியுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா். மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரி வரவுள்ளதாகவும் அவா் தெரிவித்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 13 பேரிடம் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 13 பேரிடம் மா்ம நபா்கள் ரூ.3.40 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ராமேசுவரம் சென்று தங்குவதற்கு இணையத்தி... மேலும் பார்க்க