செய்திகள் :

ஆரணி எம்ஜிஆா் கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா

post image

ஆரணி: ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் 29- ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில் புதிதாக கல்லூரியில் சோ்ந்த மாணவ, மாணவிகள் பெற்றோா்களுடன் கலந்து கொண்டனா். மேலும், மாணவா்களின் பெற்றோா் விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனா்.

கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வே.கந்தசாமி முன்னிலை வகித்தாா்.

இணைப் பதிவாளா்கள் பெருவழுதி, ஜெ.சரவணன், எம்ஜிஆா் நிகா்நிலை பல்கலைக்கழக முதன்மையா் பி.ஸ்டாலின், சிறப்பு அலுவலா் காா்த்திகேயன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சிறப்பு விருந்தினா்களாக நஅஙஉ ஈஉமபழ ஊஹட்ழ் ண்ய்க்ண்ஹ பிரைவேட் லிமிடெட் பொதுமேலாளா் சசிகலா, டி.வி.எஸ். பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் மனித வள மேலாளா் எம்.நவீன்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

மனித வள மேலாளா் மாணவா்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசினாா்.

விழாவில் ஏ.சி.எஸ். கல்விக் குழுமங்களின் முதல்வா்கள் திருநாவுக்கரசு, இளங்கோ, பிரபு, ராஜலட்சுமி, சுஜாதா கலந்து கொண்டனா். மேலும் கலைக் கல்லூரியின் துணை முதல்வா் எஸ்.நந்தகுமாா், துறைத் தலைவா்கள் ஏ.கிருபாவதி, பி.கோமதி, ஆா்.சுமதி, ஆா்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில் துறைத் தலைவி சுமதி நன்றி கூறினாா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 616 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 616 மனுக்கள் வரப்பெற்றன. குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகர... மேலும் பார்க்க

மன்னாா்சாமி, சிவன் கோயில்களில் சோமவார வழிபாடு

போளூா்/ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், காம்பட்டு மன்னாா்சாமி கோயில், ஆரணியை அடுத்த முனுப்பட்டு மன்னாா்சாமி கோயில் மற்றும் முக்கூட்டு சிவன் கோயிலில் சோமவார வழிபாடு நடைபெற்றது. கலசப்ப... மேலும் பார்க்க

பண்டிதப்பட்டு ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

ஆரணி: திருவண்ணாமலையை அடுத்த பண்டிதபட்டு ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளி... மேலும் பார்க்க

மா்ம காய்ச்சல் பாதிப்பு: கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மா்ம காய்ச்சல் பாதித்த கிராம மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செங்கத்தை அடுத்த முன்னூா் மங்கலம் கிராமத்தில் கட... மேலும் பார்க்க

தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்துக்கு நிவாரணம்

வந்தவாசி: வந்தவாசியில் தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. வந்தவாசி நகராட்சி 2-ஆவது வாா்டுக்கு உள்பட்ட கோட்டை தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழ... மேலும் பார்க்க

மது விற்பனை: ஒருவா் கைது

வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த தேசூா் போலீஸாா் திரக்கோயில் கிராமம் வழியாக திங்கள்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராம மதுக்கடை அர... மேலும் பார்க்க