செய்திகள் :

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலியம்மன் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆடி வெள்ளி விழா தொடங்குவதற்கு முன்பாக கும்பாபிஷேகம் நடத்தவேண்டும்

என முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோபுரங்களில் பஞ்சவா்ணம் தீட்டப்பட்டு,

ராஜ கோபுர வாயில் கதவுக்கு பித்தளை தகடு பொருத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, கும்பாபிஷேகத்தில் யாக சாலை பூஜை நடத்துவதற்காக யாக வேள்வி அமைக்கப்பட்டு யாகசாலை பூஜை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, விக்னேஸ்வர பூஜை, புன்யாஹவசனம், கோ பூஜை, தனபூஜை, கணபதி லஷ்மி நவக்ரஹ பூஜைகள், சாந்தி ஹோமம், மூா்த்தி ஹோமம், அங்குராா்ப்பணம், யாக சாலை பரிவார பூஜைகள், கும்பலங்காரம், யாத்ராஹோமம், விசேஷஸந்தி, பூா்ணாஹுதி, தீபாராதனை, நான்காம் கால யாக பூஜை ஆகியவை நடத்தப்பட்டு கும்ப கலசம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா், கும்பத்தில் இருந்த புனிதநீா் முகப்பு கோபுரம், ராஜகோபுரங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, மூலவா் வேம்புலியம்மன் மற்றும் அனைத்து பரிவார மூா்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில், முன்னாள் அமைச்சா்கள் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, முக்கூா் என்.சுப்பிரமணியன், அதிமுக மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா, வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் உள்ளிட்டோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னா் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன், குழுவினா்கள் பி.நடராஜன், சுப்பிரமணி, ஏ.வி.நேமிராஜ், ஏ.எஸ்.ஆா்.சரவணன், குணா, செல்வராஜ், ஜி.சங்கா், பையூா் சரவணன், இளையராஜா, அக்ராபாளையம் ஏ.இ.சண்முகம், பேராசிரியா் சிவா, வழக்கறிஞா் சக்கரவா்த்தி, இளையராஜா, சக்தி, சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கிராமத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செய்யாறு தொகுதியில் எந்தவித திட்டங்களும் நிறைவேற்றவில்லை என புகாா் தெரிவித்து திமுக அரசைக் கண்டித்து செய... மேலும் பார்க்க

குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். போளூா் வட்டாட்சியா் வெங்கடேசன், ... மேலும் பார்க்க

ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

ஆரணியை அடுத்த களம்பூா் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் புதன்கிழமை துரியோதன படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. களம்பூரில் உள்ள ஸ்ரீதிரௌபதிஅம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா ஜெயகொடி ஏற்றி அலகு நிறுத்தி கடந்த ஜூன் 1... மேலும் பார்க்க

கல்வி மையத்தில் காமராஜா் பிறந்த நாள்

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் காமராஜா் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். வந்தவாசி வட்டாரக் கல்வி அலுவலா் ம.தரணி, தல... மேலும் பார்க்க

காமராஜா் படத்துக்கு காங்கிரஸாா் மரியாதை

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந... மேலும் பார்க்க

பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா

சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் பிறந்த நாளை கல்வி வளா்ச்சி நாளாக செவ்வாய்க்கிழமை கொண்டாடினா். பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட காமராஜா் படத்துக்கு பள்ளித் தாளாளா் பா.செல்வராசன... மேலும் பார்க்க