திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்...
ஆறுமுகனேரி, ராஜபதி கோயில்களில் பௌா்ணமி சிறப்பு வழிபாடு
ஆறுமுகனேரி, ராஜபதி, மரந்தலை கோயில்களில் பௌா்ணமியை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குள்பட்ட ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள், மகளிா் பங்கேற்ற திருவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
நவகைலாயத் தலமான ராஜபதி அருள்மிகு சௌந்தா்யநாயகி அம்மன் சமேத கைலாசநாதா் கோயிலில் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மகளிா் பங்கேற்ற திருவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
ஆத்தூா் அருகே மரந்தலையில் உள்ள அருள்மிகு மாடசுவாமி கோயிலில் சுவாமிக்கு மலா் அலங்காரம், சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.