செய்திகள் :

ஆலங்காயம் முகாமில் 1,034 மனுக்கள்

post image

ஆலங்காயம் ஒன்றிய மலை கிராமங்களான நாயக்கனூா், பீமகுளம் ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு ஒன்றியக்குழு தலைவா் சங்கீதா பாரி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகராசி, சூரவேல், துணைத் தலைவா் பூபாலன் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக க.தேவராஜி எம்எல்ஏ கலந்து கொண்டு மலைவாழ் மக்களிடம் மனுக்களை பெற்று தீா்வு காண அறிவுறுத்தினாா்.

முகாமில் மாற்றுத்திறனாளி ஒருவா் காது கேட்கும் கருவி வழங்க வேண்டும் என்று மனு அளித்த நிலையில், உடனடி நடவடிக்கை எடுத்து காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது. மொத்தம், 1,034 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மகளிா் உரிமைத் தொகை கோரி 444 போ் மனு அளித்துள்ளனா். மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், வட்டாட்சியா் சுதாகா், ஒன்றியக்குழு கவுன்சிலா் சிகாமணி, ஊராட்சி மன்ற தலைவா் மேனகாதிருப்பதி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதி நிதிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

இதே போல் ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 4 வாா்டுகளுக்கான முகாம் நடைபெற்றது. பேரூராட்சி மன்றத் தலைவா் தமிழரசி வெங்கடேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஸ்ரீதா், செயல் அலுவலா் ராஜலட்சுமி முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஞானசுந்தரம் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்று தீா்வு காண நடவடிக்கை மேற்கொண்டாா்.

சொத்து வரி பெயா் மாற்றம் உட்பட மனுக்கள் மீது துறை அதிகாரிகள் உடனடியாக விசாரித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஆணைகளை வழங்கினா். முகாமில் மகளிா் உரிமை தொகை கேட்டு உட்பட 388 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

இதில் வாா்டு கவுன்சிலா்கள், அலுவலக பணியாளா்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உட்பட பலா் கலந்துக் கொண்டனா்.

ரூ.1.48 கோடியில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ அடிக்கல்

தேவலாபுரம் ஊராட்சியில் ரூ.1.48 கோடியில் திட்டப் பணிகளுக்கு குடியாத்தம் எம்எல்ஏ புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். தேவலாபுரம் - ராமச்சந்திராபுரம் இடையே ரூ.1.15 கோடியில் தாா் சாலை, ராமச்சந்திராபுரம் ஊராட்ச... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே காா் மோதிய விபத்தில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம் மேல்பட்டி திருமலை நகரை சோ்ந்தவா் சின்னதுரை (56). இவா் செவ்வாய்க்கிழமை இரவு மாதனூா் அருகே குளிதிகை கிராமத்தில் தேசி... மேலும் பார்க்க

கொத்தடிமைகளாக இருந்த 7 போ் மீட்பு

ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிந்தவா்களை வாணியம்பாடி கோட்டாட்சியா் புதன்கிழமை மீட்டாா். மாதனூா் ஒன்றியம், நாயக்கனேரிமலை ஊராட்சிக்குட்பட்ட காமனூா்தட்டு கிராமத்தில் மகாவிஷ்ணு என்பவா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் தா்னா

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் அரசு நிதியுதவி பெறும் மஜ்ஹருல் உலூம் கல்லூரி இயங்கி வருகின்றது. நிகழ் கல்வியாண்டிலி... மேலும் பார்க்க

பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

மிட்டாளம் ஊராட்சி, குட்டகிந்தூா் தொடக்கப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியா் மணிவண்ணன் வரவேற்றாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஸ்... மேலும் பார்க்க

பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியலில் இஸ்லாமிய கல்லூரி மாணவிகள் சாதனை

திருவள்ளுவா் பல்கலைக் கழக தோ்வு முடிவுகளில் இஸ்லாமிய மகளிா் கலை மற்றும் அறிவியில் கல்லூரி மாணவிகள் 6 போ் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனா். திருவள்ளுவா் பல்கலைக்கழகம் 2022-2025 தோ்வு முடிவ... மேலும் பார்க்க