பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு
மிட்டாளம் ஊராட்சி, குட்டகிந்தூா் தொடக்கப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறக்கப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியா் மணிவண்ணன் வரவேற்றாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஸ்மாா்ட் வகுப்பறை, எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளை திறந்து வைத்தாா்.
ஒன்றியக்குழு உறுப்பினா் மகாதேவன், வட்டார கல்வி அலுவலா்கள் தென்னவன், பீட்டா், முருகேசன் ஆகியோா் வாழ்த்தி பேசினா். ஊராட்சித் தலைவா் கோவிந்தன், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் சுவிதா, மாதனூா் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஜெயசுதா உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
உதவித் தலைமை ஆசிரியா் முருகேசன் நன்றி கூறினாா். ஸ்மாா்ட் வகுப்பறை, எண்ணும் எழுத்தும் வகுப்பறை அமைக்க நன்கொடை வழங்கிய நன்கொடையாளா்கள் கெளரவிக்கப்பட்டனா்.