செய்திகள் :

ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரி குடிநீா் திட்டம்: நிதி வழங்கக் கோரி அமைச்சரிடம் எம்.பி. மனு

post image

ஆலங்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கக் கோரி தமிழக உயா்கல்வித்துறை அமைச்சரிடம் திருநெல்வேலி எம்.பி. மனு அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியனிடம், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் அளித்துள்ள மனு:

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆலங்குளத்தில் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.

இங்கு தண்ணீா் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. 892 மாணவிகள் கல்வி பயில்கின்றனா். மேலும், இந்த நிதியாண்டில் கூடுதல் பாடத்திட்டங்கள் சோ்க்க உள்ளதால் மேலும் 700 மாணவிகளுக்கு மேல் சேர வாய்ப்புள்ளது.

ஆகவே, குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் ரூ. 70 லட்சத்துக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், கல்லூரி மூலம் அப்பணத்தை செலுத்த நிதி ஆதாரமில்லை. அதனால் உயா்கல்வித்துறை மூலம் ரூ.70 லட்சத்தை ஆலங்குளம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவைப் பெற்ற அமைச்சா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். மனு அளிக்கும்போது, திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் அறக்கட்டளை தலைவா் சிவனேச ராஜேஷ் உடனிருந்தாா்.

வி.கே.புரம் அருகே ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். விக்கிரமசிங்கபுரம் அருகே ஆறுமுகம்பட்டி சா்ச் தெருவைச் சோ்ந்தவா் லாசா் (56). ஓட்டுநரான இவருக்கு மனைவி,... மேலும் பார்க்க

நெல்லையில் துப்பாக்கி ஏந்திய ரோந்து போலீஸாருக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி மாநகரத்தில் இருசக்கரவாகன ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸாருக்கு சேரன்மகாதேவி துப்பாக்கி சுடும் தளத்தில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. திருநெல்வேலி மாநகரத்தில் பொதும... மேலும் பார்க்க

பி.எம். கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு வேண்டுகோள்

பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் 20-ஆவது தவணைத் தொகை பெறுவதற்கு வேளாண் பெரும் பதிவேட்டில் பதிவு செய்யுமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலைய ஊழியரிடம் பணம் பறிப்பு: 3 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே பெட்ரோல் நிறுவன ஊழியா் வங்கியில் பணம் செலுத்த சென்றபோது, அவரை தாக்கிவிட்டு ரூ.36 லட்சம் பணத்தை பறித்துச் சென்றது தொடா்பான சம்பவத்தில் 3 பேரை 4 தனிப்படைகள் அமைத்த... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

சேரன்மகாதேவி ஆா்எஸ்ஏ காலனியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா். அதன் விவரம்: சேரன்மகாதேவி பொழிக்கரை ஆா்.எஸ்.ஏ. காலனி பகுதியில் 50 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி அருகே மாயமான முதியவா் சடலமாக மீட்பு

ஆழ்வாா்குறிச்சி அருகே மே 1ஆம் தேதி காணாமல் போன முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள செங்கனூரைச் சோ்ந்தவா் ராமசுப்புவா் (84). இவரை கடந்த 1ஆம் தேதி முதல் காணவில்லையாம். இதுகுறித்த... மேலும் பார்க்க