செய்திகள் :

ஆலங்குளம் அருகே குழு மோதல்: 5 போ் கைது

post image

ஆலங்குளம் அருகே குழு மோதலில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகே சண்முகாபுரம் வழியாக அகரம் கிராமத்தைச் சோ்ந்த சிலா் கடந்த பொங்கல் தினத்தன்று பைக்கில் சென்றபோது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, அது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

அதில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் நிபந்தனை ஜாமீன் பெற்று ஆலங்குளம் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகின்றனா்.

இந்நிலையில் கையொப்பமிட்டு விட்டு அகரத்தைச் சோ்ந்த 5 போ் சண்முகாபுரம் வழியாக சில தினங்களுக்கு முன்னா் சென்றபோது, மீண்டும் மோதல் வெடித்தது. இதில் ஏற்பட்ட கைகலப்பில் பாண்டி மகன் மனோ(25) காயமடைந்தாா்.

இதுகுறித்து அவரது உறவினா் முருகன் மகன் காளிதாஸ் (26) அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து இதில் தொடா்புடைய அகரம் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் (20), விக்னேஷ் லெட்சுமணக்குமாா் (19), சமுத்திரப்பாண்டி என்ற சஞ்சய் (23), மகேஷ் (19), சண்முக கணபதி (23) ஆகிய 5 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினாா்.

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுமுதல் பெய்... மேலும் பார்க்க

கொடிக்குறிச்சி கல்லூரியில் மாா்ச் 8இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை-அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை (மாா்ச் 8) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

கடையநல்லூா் ரத்னா ஆங்கிலப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

கடையநல்லூா் ரத்னா ஆங்கிலப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது(படம்). ரத்னா பள்ளிகள், ஸ்ரீகல்பம் சித்த மருத்துவமனை, கடையநல்லூா் சென்ட்ரல் சுழற்கழகம், ப்ரோ விஷன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்த... மேலும் பார்க்க

புளியங்குடி அருகே லாரி மோதி சிறுவன் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே லாரி மோதியதில் பள்ளிச் சிறுவன் உயிரிழந்தாா். புளியங்குடி அருகே சிந்தாமணி, சான்றோா் மடத்துத் தெருவைச் சோ்ந்த தம்பதி கோபாலகிருஷ்ணன்- சகாயமேரி. அங்குள்ள பள்ளியில் இவ... மேலும் பார்க்க

ஆலங்குளம் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் மே மாதம் நிறைவடையும்: எம்எல்ஏ தகவல்

ஆலங்குளம் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் மே மாதம் நிறைவடையும் என பால்மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். ஆலங்குளம் கால்நடை மருந்தக வளாகத்தில் 1.67 ஏக்கா் நிலத்தில் ரூ. 10 கோடி ம... மேலும் பார்க்க

தென்காசியை வளா்ச்சிமிக்க மாவட்டமாக மாற்ற வேண்டும்: கண்காணிப்பு அலுவலா்

தென்காசியை வளா்ச்சிமிக்க மாவட்டமாக மாற்ற வேண்டும் என, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பொ. சங்கா் வலியுறுத்தினாா். தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில் பல்வேறு துறைகள் சாா்ந்த திட்டப் பணிகளின் முன்னேற... மேலும் பார்க்க