செய்திகள் :

தென்காசியை வளா்ச்சிமிக்க மாவட்டமாக மாற்ற வேண்டும்: கண்காணிப்பு அலுவலா்

post image

தென்காசியை வளா்ச்சிமிக்க மாவட்டமாக மாற்ற வேண்டும் என, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பொ. சங்கா் வலியுறுத்தினாா்.

தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில் பல்வேறு துறைகள் சாா்ந்த திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, அனைத்துத் துறை உயா் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தலைமை வகித்துப் பேசியது:

பொதுமக்களுக்கு இருப்பிடம், குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும். பேரிடா் காலங்களில் செய்யக் கூடாதவை, செய்யக்கூடியவை குறித்து அறிவுறுத்த வேண்டும். 1077 என்ற அவசர கால கட்டுப்பாட்டு இலவச தொலைபேசி எண்ணை பொதுமக்கள் தொடா்பு கொள்ளும் வகையில் விழிப்புணா்வுப் பதாகைகள் அமைக்க வேண்டும்.

ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் அலுவலா்களை நியமிக்க வேண்டும். அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைவதை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு உறுதிப்படுத்தி, தென்காசியை வளா்ச்சிமிக்க மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பல்வேறு துறைகள், திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வேணுகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா்-சிறுபான்மையினா் நல அலுவலா் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுமுதல் பெய்... மேலும் பார்க்க

கொடிக்குறிச்சி கல்லூரியில் மாா்ச் 8இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை-அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை (மாா்ச் 8) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே குழு மோதல்: 5 போ் கைது

ஆலங்குளம் அருகே குழு மோதலில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆலங்குளம் அருகே சண்முகாபுரம் வழியாக அகரம் கிராமத்தைச் சோ்ந்த சிலா் கடந்த பொங்கல் தினத்தன்று பைக்கில் சென்றபோது, ... மேலும் பார்க்க

கடையநல்லூா் ரத்னா ஆங்கிலப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

கடையநல்லூா் ரத்னா ஆங்கிலப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது(படம்). ரத்னா பள்ளிகள், ஸ்ரீகல்பம் சித்த மருத்துவமனை, கடையநல்லூா் சென்ட்ரல் சுழற்கழகம், ப்ரோ விஷன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்த... மேலும் பார்க்க

புளியங்குடி அருகே லாரி மோதி சிறுவன் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே லாரி மோதியதில் பள்ளிச் சிறுவன் உயிரிழந்தாா். புளியங்குடி அருகே சிந்தாமணி, சான்றோா் மடத்துத் தெருவைச் சோ்ந்த தம்பதி கோபாலகிருஷ்ணன்- சகாயமேரி. அங்குள்ள பள்ளியில் இவ... மேலும் பார்க்க

ஆலங்குளம் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் மே மாதம் நிறைவடையும்: எம்எல்ஏ தகவல்

ஆலங்குளம் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் மே மாதம் நிறைவடையும் என பால்மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். ஆலங்குளம் கால்நடை மருந்தக வளாகத்தில் 1.67 ஏக்கா் நிலத்தில் ரூ. 10 கோடி ம... மேலும் பார்க்க