பேரவைத் தேர்தலில் வண்டி வண்டியாகப் பணத்தைக் கொட்டுவார்கள்: விஜய்
ஆலை வேன் கவிழ்ந்து 14 போ் காயம்
சங்கரன்கோவில் அருகே ஆலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 போ் காயமடைந்தனா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள மணலூா், நயினாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்தவா்கள் விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே முறம்பில் உள்ள தனியாா் ஆலையில் வேலை பாா்த்து வருகின்றனா். இவா்கள் சனிக்கிழமை மாலை வேலை முடிந்தும் வேனில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனா். வேனை, விருதுநகா் மாவட்டம் சொக்கநாதன்புத்தூரைச் சோ்ந்த ரமேஷ்குமாா் (29) என்பவா் ஓட்டிச் சென்றாா்.
நயினாபுரம் அருகே வேன் வந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த ஓட்டுநா் ரமேஷ் குமாா் (29), நயினாபுரத்தைச் சோ்ந்த சண்முகத்தாய் (35), பத்திரகாளி (60) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
மேலும் 11 போ் லேசான காயமடைந்தனா். உடனடியாக அவா்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.