செய்திகள் :

ஆவடி: "பங்குச் சந்தையில போட்டா..." - இன்ஜினீயரிடம் ரூ.1.5 கோடி மோசடி; போலீஸிடம் சிக்கியது எப்படி?

post image

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (55). சிவில் இன்ஜினீயரான இவரின் வாட்ஸ்அப் நம்பருக்குப் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான லின்க் ஒன்று வந்தது. அந்த லிங்கை ஜெயராமன் ஓப்பன் செய்தபோது அதில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பாகும் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதனால் ஜெயராமனும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினார்.

இதையடுத்து பங்குச் சந்தை முதலீடு தொடர்பாக ஜெயராமனிடம் சிலர் பேசினர். பின்னர் ஜெயராமனின் செல்போன் நம்பரைப் பங்குச் சந்தை முதலீடு திட்டம் தொடர்பான வாட்ஸ்அப் குரூப்பில் அவர்கள் சேர்த்தனர். அந்த வாட்ஸ்அப் குரூப்பில் தினமும், "நான் இவ்வளவு முதலீடு செய்தேன். அதற்கு இவ்வளவு பணம் லாபமாகக் கிடைத்தது" என மெசேஜ்கள் வந்து குவிந்தன. அதைப் பார்த்த ஜெயராமனும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினார்.

மோசடி வழக்கில் கைதான அஜித்குமார்

ஜெயராமனுக்கும் லாபம் கிடைத்ததாக மெசேஜ்கள் வரத் தொடங்கின. அதனால் அவரும் மகிழ்ச்சியடைந்து அடுத்டுத்து முதலீடுகளைத் தொடங்கினார். ஜெயராமன் மட்டும் ஒன்றரைக் கோடி ரூபாய் வரை முதலீடு செய்தார். அதற்கும் பல லட்சம் ரூபாய் லாபம் கிடைத்ததாக மெசேஜ்கள் ஜெயராமனுக்கு வந்தன. ஆனால் அந்தப் பணத்தை ஜெயராமனால் எடுக்க முடியவில்லை. பங்குச் சந்தை முதலீடு தொடர்பாக ஜெயராமனுக்கு ஆலோசனை வழங்கியவர்களின் செல்போன் நம்பர்களும் சுவிட்ச் ஆப் ஆனது. அதன்பிறகே ஜெயராமன், ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இதையடுத்து ஆதாரங்களுடன் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் செயல்படும் சைபர் க்ரைம் பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான போலீஸார் ஜெயராமன் அனுப்பிய பணம் எந்த வங்கிக் கணக்குகளுக்குச் சென்றது என விசாரித்தனர். அப்போது சென்னையில் உள்ள ஒரு வங்கிக் கணக்குக்கு அந்தப் பணம் சென்றிருப்பது தெரியவந்தது. அந்த வங்கிக் கணக்கு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரின் பெயரிலிருந்தது.

உடனடியாக அஜித்குமாரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். இவர் ஓட்டல் ஒன்றில் மாஸ்டராக வேலை செய்து வருவது தெரியவந்தது. இவரின் பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கிய பங்குச் சந்தை முதலீடு மோசடி கும்பல், தமிழகத்தில் பலரை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. இந்த பண மோசடியில் அஜித்குமாருக்கும் குறிப்பிட்ட தொகை கமிஷனாக சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அஜித்குமாரை போலீஸார் கைது செய்தனர். அவரின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது புதுச்சேரியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் வங்கிக் கணக்குக்கும் மோசடி பணம் சென்றிருப்பது தெரியவந்தது. அதனால் பிரகாஷை போலீஸார் கைது செய்தனர்.

இவர், பி.ஏ படித்துவிட்டு சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார். இதையடுத்து அவரும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை ஆவடி மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஆன்லைன் மோசடி

இந்த வழக்கு குறித்து போலீஸார் கூறுகையில், ``சைபர் க்ரைம் மோசடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இன்னமும் இந்த மோசடி தொடர்கதையாகவே உள்ளது. ஜெயராமனைத் தொடர்பு கொண்ட பங்குச் சந்தை முதலீடு மோசடி கும்பல், பணத்தாசைக் காட்டி ஒன்றரைக் கோடி ரூபாயைச் சுருட்டியிருக்கிறார்கள். இந்த வழக்குப் பின்னணியில் பெரிய நெட்வொர்க் உள்ளது. அவர்களைக் கைது செய்தால் மட்டுமே முழு விவரம் தெரியவரும். தற்போது கைதாகியிருக்கும் பிரகாஷ், அஜித்குமார் ஆகிய இருவரும் தங்களின் வங்கிக் கணக்குகளை மோசடி கும்பலுக்குக் கொடுத்திருக்கிறார்கள்" என்றனர்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

சென்னை: தொழிலதிபர் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு... நேபாள டிரைவர் கைது - அதிர்ச்சி பின்னணி!

சென்னை நுங்கம்பாக்கம், லேக் ஏரியா, 5-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் சுலைமான் (67). இவர் கடந்த 21.12.2024-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். பின்னர் 3.1.2025-ம் தேதி ... மேலும் பார்க்க

கடலூர்: `சங்கத்தை மதிக்கவில்லை..!’ – திருநங்கை அடித்துக் கொலை; சக திருநங்கையர் உள்ளிட்ட 6 பேர் கைது!

கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் இருக்கும் காப்புக் காட்டில், உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் திருநங்கை ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த உடலை கைப... மேலும் பார்க்க

`வாழ்க்கை சிறப்பாக அமைய பூஜைகள்' - போலி ஜோதிடரிடம் ரூ.6 லட்சம் இழந்த 24 வயது பெண் - நடந்தது என்ன?

பெங்களூரைச் சேர்ந்த 24 வயது பெண் இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்துகொண்ட போலி ஜோசியக்காரரிடம் 6 லட்சம் வரை ஏமாந்திருக்கிறார். தனது திருமணம் குறித்து அறிந்துகொள்ள ஜோசியக்காரரை நாடிய பெண், மூளைச்சலவை செய்யப்பட... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அவனுங்க 3 பேரையும் முடிச்சிடு' - உத்தரவு போட்ட காதலி; கொலைசெய்து வீடியோ அனுப்பிய ரௌடி!

புதுச்சேரியின் மையப்பகுதியில் இருக்கும் ரெயின்போ நகர், அடர்த்தியான குடியிருப்புப் பகுதி. அதில் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டில், மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக க... மேலும் பார்க்க

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து தாயிக்குப் பாலியல் வன்கொடுமை; திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது பெண்ணும், அவருடைய கணவரும் தங்களுடைய மூன்று வயது குழந்தையுடன் திருப்பூருக்குக் கடந்த 17-ஆம் தேதி வேலை தேடி வந்துள்ளனர். திருப்பூரில் பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளன... மேலும் பார்க்க

Ranveer Allahbadia: ``இவர் மூளையில் அழுக்கு..." - யூடியூபரை விளாசிய உச்ச நீதிமன்றம்!

India's Got Latent Show என்ற யூடியூப் நிகழ்ச்சியில் யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா செய்த சர்ச்சைக்குரிய நகைச்சுவை குறித்த பல்வேறு வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. சமய் ரெய்னா என்ற ... மேலும் பார்க்க