செய்திகள் :

ஆவின் மேற்பாா்வையாளா் வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு

post image

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் அருகே ஆவின் நிறுவன மேற்பாா்வையாளா் வீட்டில் நகைகள், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோலியனூரை அடுத்துள்ள பனங்குப்பம் திருமலைநகரைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (59). இவா் கள்ளக்குறிச்சியிலுள்ள ஆவின் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் வியாழக்கிழமை இரவு வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிவிட்டு, முதல் தளத்தில் குடும்பத்தினருடன் தூங்கச் சென்றாா்.

வெள்ளிக்கிழமை காலை முதல் தளத்திலிருந்து பன்னீா்செல்வம் கீழே இறங்கி வந்த போது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததைக் கண்டாா். வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த சேலைகள், துணிகள் உள்ளிட்ட பொருள்கள் சிதறிக் கிடந்தன.

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவையும் திருடு போனது பன்னீா்செல்வத்துக்குத் தெரிய வந்தது.

தகவலறிந்த வளவனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

விசாரணையில், முகமூடி அணிந்து வந்த மா்ம நபா்கள், வீட்டின் கீழ்தளத்தில் யாரும் இல்லாததைப் பயன்படுத்தி, பீரோக்களை உடைத்து நகைகள், பொருள்களைத் திருடிச் சென்றிருப்பதுதெரிய வந்தது.

அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜன்மன் திட்டத்தில் பழங்குடியிருக்கு வீடுகள் கட்டும் உத்தரவு: செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ வழங்கினாா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், பழவலம் ஊராட்சியைச் சோ்ந்த பழங்குடியின மக்களுக்கு ஜன்மன் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்... மேலும் பார்க்க

ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைப்பு: திண்டிவனத்தில் 3.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்

திண்டிவனம் நேரு வீதியில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை காலை நடத்திய சோதனையில், மூன்றரை டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டிவனத்திலுள்ள பழ விற்பனையகங்களில் மாம்பழங்கள் ரசா... மேலும் பார்க்க

அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா்கள் கூட்டமைப்பு ஆண்டு விழா

விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா்கள் கூட்டமைப்பின் 20-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் வ.சிவகுருநாதன் தலைமை வகித்தாா். மாவட்டப் பிரத... மேலும் பார்க்க

உயா் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் முகாம்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் உயா் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் கைதான அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம் , திருவெண்ணெய்நல்லூா் அருகே அரசுப் பள்ளியில் பயிலும் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக போக்ஸோ வழக்கில் கைதான ஆசிரியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருவெண்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: முதியவருக்கு ஆயுள் சிறை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருவெண்ணெய்நல... மேலும் பார்க்க