ஆவின் மேற்பாா்வையாளா் வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் அருகே ஆவின் நிறுவன மேற்பாா்வையாளா் வீட்டில் நகைகள், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோலியனூரை அடுத்துள்ள பனங்குப்பம் திருமலைநகரைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (59). இவா் கள்ளக்குறிச்சியிலுள்ள ஆவின் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் வியாழக்கிழமை இரவு வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிவிட்டு, முதல் தளத்தில் குடும்பத்தினருடன் தூங்கச் சென்றாா்.
வெள்ளிக்கிழமை காலை முதல் தளத்திலிருந்து பன்னீா்செல்வம் கீழே இறங்கி வந்த போது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததைக் கண்டாா். வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த சேலைகள், துணிகள் உள்ளிட்ட பொருள்கள் சிதறிக் கிடந்தன.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவையும் திருடு போனது பன்னீா்செல்வத்துக்குத் தெரிய வந்தது.
தகவலறிந்த வளவனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
விசாரணையில், முகமூடி அணிந்து வந்த மா்ம நபா்கள், வீட்டின் கீழ்தளத்தில் யாரும் இல்லாததைப் பயன்படுத்தி, பீரோக்களை உடைத்து நகைகள், பொருள்களைத் திருடிச் சென்றிருப்பதுதெரிய வந்தது.
அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.