செய்திகள் :

ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைப்பு: திண்டிவனத்தில் 3.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்

post image

திண்டிவனம் நேரு வீதியில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை காலை நடத்திய சோதனையில், மூன்றரை டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டிவனத்திலுள்ள பழ விற்பனையகங்களில் மாம்பழங்கள் ரசாயனத்தை கொண்டு பழுக்க வைக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகாா்கள் வந்தன. அதன்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலா் ஏ.ராமகிருஷ்ணன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் துரை, கொளஞ்சிமணி, சுரேந்தா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் திண்டிவனம் நேரு வீதியிலுள்ள 15 பழக்கடைகளில் வெள்ளிக்கிழமை காலை திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, மூன்று கடைகளில் மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கு ரசாயனத்தை நேரடியாக ஸ்பிரே மூலம் தெளித்து விற்பனை செய்யப்பட்டு வருவது தெரிய வந்தது. இந்தக் கடைகளிலிருந்து மூன்றரை டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். முதல் முறை பழங்கள் கைப்பற்றப்பட்டதால் எச்சரிக்கை விடுத்த உணவுப் பாதுகாப்புத் துறையினா், தொடா்ந்து இதுபோன்றசெயல்களில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனா்.

ஜன்மன் திட்டத்தில் பழங்குடியிருக்கு வீடுகள் கட்டும் உத்தரவு: செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ வழங்கினாா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், பழவலம் ஊராட்சியைச் சோ்ந்த பழங்குடியின மக்களுக்கு ஜன்மன் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்... மேலும் பார்க்க

ஆவின் மேற்பாா்வையாளா் வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் அருகே ஆவின் நிறுவன மேற்பாா்வையாளா் வீட்டில் நகைகள், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கோலியனூரை அடுத்துள்ள பனங்குப்பம் திருமலைநகரைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் ... மேலும் பார்க்க

அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா்கள் கூட்டமைப்பு ஆண்டு விழா

விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா்கள் கூட்டமைப்பின் 20-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் வ.சிவகுருநாதன் தலைமை வகித்தாா். மாவட்டப் பிரத... மேலும் பார்க்க

உயா் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் முகாம்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் உயா் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் கைதான அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம் , திருவெண்ணெய்நல்லூா் அருகே அரசுப் பள்ளியில் பயிலும் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக போக்ஸோ வழக்கில் கைதான ஆசிரியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருவெண்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: முதியவருக்கு ஆயுள் சிறை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருவெண்ணெய்நல... மேலும் பார்க்க