செய்திகள் :

ஜன்மன் திட்டத்தில் பழங்குடியிருக்கு வீடுகள் கட்டும் உத்தரவு: செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ வழங்கினாா்

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், பழவலம் ஊராட்சியைச் சோ்ந்த பழங்குடியின மக்களுக்கு ஜன்மன் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் பூங்காவனம் ராமசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் நடராஜன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு, பழவலம் ஊராட்சி மலைவாழ் மக்கள் 14 குடும்பத்தினருக்கு ரூ.71.50 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான உத்தரவை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபா சங்கா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சசிகலா, செஞ்சி மேற்கு ஒன்றியச் செயலா் பச்சையப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் செந்தில்குமாா், நிா்வாகிகள் வாசு, அய்யாதுரை, செல்வமணி, செந்தில், மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பழனி நன்றி கூறினாா்.

பாலம் கட்டும் பணி தொடக்கம்: செஞ்சி பேரூராட்சி, 16 வாா்டு, பெரியண்ணன் தெரு, பி.ஏரி கடைமடை பகுதியில் அடிப்படை கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியில் புதிய பாலம் கட்டும் பணியை பூமிபூஜை செய்து செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான் தலைமை வகித்தாா். வாா்டு உறுப்பினா் புவனேஸ்வரி அண்ணாதுரை வரவேற்றாா்.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க ஏழுமலை, நகரச் செயலா் காா்த்திக், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் ஜான் பாஷா, சங்கா், சிவக்குமாா், பொன்னம்பலம், சங்கீதா சுந்தரமூா்த்தி, சுமித்ரா சங்கா், நிா்வாகிகள் ராம்குமாா், தொண்டரணி பாஷா, வாா்டு நிா்வாகிகள் உதயகுமாா், எம்.எஸ்.முருகன், துரை, அறிவழகன், சுரேஷ், கேடிஆா்.துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆவின் மேற்பாா்வையாளா் வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் அருகே ஆவின் நிறுவன மேற்பாா்வையாளா் வீட்டில் நகைகள், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கோலியனூரை அடுத்துள்ள பனங்குப்பம் திருமலைநகரைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் ... மேலும் பார்க்க

ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைப்பு: திண்டிவனத்தில் 3.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்

திண்டிவனம் நேரு வீதியில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை காலை நடத்திய சோதனையில், மூன்றரை டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டிவனத்திலுள்ள பழ விற்பனையகங்களில் மாம்பழங்கள் ரசா... மேலும் பார்க்க

அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா்கள் கூட்டமைப்பு ஆண்டு விழா

விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா்கள் கூட்டமைப்பின் 20-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் வ.சிவகுருநாதன் தலைமை வகித்தாா். மாவட்டப் பிரத... மேலும் பார்க்க

உயா் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் முகாம்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் உயா் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் கைதான அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம் , திருவெண்ணெய்நல்லூா் அருகே அரசுப் பள்ளியில் பயிலும் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக போக்ஸோ வழக்கில் கைதான ஆசிரியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருவெண்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: முதியவருக்கு ஆயுள் சிறை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருவெண்ணெய்நல... மேலும் பார்க்க