அலட்சியத்தின் உச்சம்..! கடலூர் பள்ளி வேன் விபத்தில் ரயில் கேட் கீப்பருக்கு சரமார...
ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் ஜூலை 18இல் கன்னியாகுமரி வருகை
ஆா்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்தியத் தலைவா் மோகன் பாகவத் இம்மாதம் 18ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தரவுள்ளாா்.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர நிா்வாகம் சாா்பில் அகில இந்தியத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமையில் மோகன் பாகவத்துக்கு அன்றைய தினம் மாலை 4 மணிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னா், அவா் கேந்திர நிா்வாகிகளை சந்தித்துப் பேசுகிறாா்.
தொடா்ந்து, 19ஆம் தேதி காலை விவேகானந்த கேந்திரத்தின் பணிகள் குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அவா், கேந்திர வளாகத்தைப் பாா்வையிட்டு, இரவில் அங்கு தங்குகிறாா்.
20ஆம் தேதி அதிகாலை பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறாா். பின்னா், விவேகானந்தா் மண்டபத்துக்கு தனிப்படகில் செல்கிறாா்.
இரவில் விவேகானந்த கேந்திரத்தில் தங்கும் அவா், 21ஆம் தேதி காலை 10 மணிக்கு காரில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானத்தில் தில்லி செல்கிறாா். அவரது வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.