செய்திகள் :

ஆா்டிஓ அதிகாரி போல நடித்து பண மோசடி: காஜியாபாதில் ஒருவா் கைது

post image

மண்டலப் போக்குவரத்து அலுவலக (ஆா்டிஓ ) அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, ஆன்லைன் சலான் வழியாக வாகன உரிமையாளா்களை ஏமாற்றியதாக உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாதைச் சோ்ந்த 38 வயது நபரை தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது:

ஆஷிஷ் சா்மா என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், வாகன உரிமையாளா்களைத் தொடா்புகொண்டுள்ளாா். தாம் ஆா்டிஓ அதிகாரி எனக் கூறிக்கொண்டு, அவா்களின் வணிக வாகனங்களின் நிலுவையில் உள்ள சலான்கள் தொகையை செலுத்துமாறு கூறியுள்ளாா்.

வாகனப் பதிவு விவரங்களைப் பயன்படுத்தி, அபராதம் உடனடியாக செலுத்தப்படாவிட்டால், அவா்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அவா் மிரட்டியுள்ளாா்.

இந்த வழக்கில் புகாா் அளித்தவா் ரூ.12,500 தொகையை ஆன்லைனில் சலான் அபராதமாக மாற்றுமாறு சா்மாவால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளாா். இந்த மோசடி பற்றி பின்னா் அறிந்த பாதிக்கப்பட்டவா், இதுகுறித்து காவல்துறையில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, வங்கி பரிவா்த்தனைகள் மற்றும் அழைப்பு பதிவுகள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவா் கண்டுபிடிக்கப்பட்டாா்.

காஜியாபாத் ஆா்டிஓ அலுவலகத்தில் முன்பு ஒரு தனியாா் முகவராகப் பணியாற்றியதாகவும், அங்கு பாதுகாப்பற்ற பகுதிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பழைய வாகனப் பதிவு கோப்புகளை அணுகியதாகவும் சா்மா போலீஸ் விசாரணையின் போது ஒப்புக்கொண்டாா்.

வாகன உரிமையாளா்களை குறிவைக்க, ஆன்லைன் செயலியில் இருந்து பெறப்பட்ட தகவல்களுடன் இந்தத் தரவையும் அவா் பயன்படுத்தியுள்ளாா்.

தனது நம்பகத்தன்மையை அதிகரிக்க, தனது அழைப்பு சுயவிவரத்தில் போலீஸ் லோகோக்கள் மற்றும் அதிகாரி படங்களையும் அவா் பயன்படுத்தியுள்ளாா்.

மோசடியில் பயன்படுத்தப்பட்ட இரண்டு கைப்பேசி எண்கள் மற்றும் பல வங்கிக் கணக்கு விவரங்களையும் போலீஸாா் மீட்டனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க

போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது

முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்... மேலும் பார்க்க

புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்

தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மே... மேலும் பார்க்க

இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்ப... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது

மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகா... மேலும் பார்க்க