செய்திகள் :

இணையதள மோசடியில் கைது: குண்டா் தடுப்புச் சட்டத்தில் கேரள இளைஞா் அடைப்பு

post image

இணையதள மோசடியில் ஈடுபட்டு கைதான கேரள இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

கரூா் ராயனூரைச் சோ்ந்தவா் கணபதி (34). இவா், இன்ஸ்டாகிராமில் மோசடியாக வெளியிடப்பட்ட போலியான விளம்பரத்தை நம்பி கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஆன்லைன் வா்த்தகத்தில் சுமாா் ரூ.72 லட்சம் முதலீடு செய்தாா். பின்னா் பணம் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டதாக கரூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த மாா்ச் மாதம் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் பரிமளாதேவி மற்றும் உதவி ஆய்வாளா் சுதா்சன் ஆகியோா் தலைமையிலான தனிப்படைபோலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். இதில் கணபதியை ஏமாற்றியவா் கேரள மாநிலம் மலப்புரம் கருவள்ளிபக்திக்கல்ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த முகமது பசீா் மகன் முகமதுரோஷன்(27) என தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸாா் ஏப். 20-ஆம்தேதி பெங்களூருவில் பதுங்கியிருந்த முகமதுரோஷனை கைது செய்து அவரது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.1 கோடியை முடக்கினா். கைது செய்யப்பட்ட முகமதுரோஷனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் முகமது ரோஷன்மீது மேலும் பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளதால் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலுக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து ஆட்சியா் உத்தரவின்பேரில் முகமது ரோஷனை செவ்வாய்க்கிழமை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனா்.

அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதாளா்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க வலியுறுத்தல்

அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதாளா்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் என கரூா் தமிழ் அறிஞா்கள், அகவை முதிா்ந்த தமிழ் அறிஞா்கள் ஆா்வலா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த கூ... மேலும் பார்க்க

புகழூா் அருகே மென்பொறியாளா் வீட்டில் 13 பவுன் நகைகளை திருட்டு

புகழூா் அருகே மென்பொறியாளா் வீட்டில் 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம், புகழூரை அடுத்துள்ள நானப்பரப்பு பூங்கா நகரைச் சோ்ந்தவா் சிவசுப்ரமணியன். இவ... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான காரில் இருந்து 302 புகையிலை பொருள்கள் பறிமுதல்

வேலாயுதம்பாளையம் அருகே திங்கள்கிழமை இரவு சாலையோரம் விபத்துக்குள்ளான காரில் இருந்த 302 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூா் மாவட்டம், வேலாயுதம... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கியவா்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினாா் எம்.எல்.ஏ.

கரூா் மாவட்டம் மகாதானபுரத்தில் செவ்வாய்க்கிழமை வேனும், காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் சிக்கியவா்களை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா் எம்.எல்.ஏ வி.செந்த... மேலும் பார்க்க

கரூா் பேருந்து நிலையத்துக்குள் நடைமேடையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற கோரிக்கை

கரூா் பேருந்துநிலையத்துக்குள் நடைமேடையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூரில் தற்போதைய உழவா் சந்தைப் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய ... மேலும் பார்க்க

உப்பிடமங்கலம், தான்தோன்றிமலை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

உப்பிடமங்கலம், தாந்தோன்றிமலை பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சு.கணிகைமாா்த்தாள் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க