இணையதள மோசடியில் கைது: குண்டா் தடுப்புச் சட்டத்தில் கேரள இளைஞா் அடைப்பு
இணையதள மோசடியில் ஈடுபட்டு கைதான கேரள இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
கரூா் ராயனூரைச் சோ்ந்தவா் கணபதி (34). இவா், இன்ஸ்டாகிராமில் மோசடியாக வெளியிடப்பட்ட போலியான விளம்பரத்தை நம்பி கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஆன்லைன் வா்த்தகத்தில் சுமாா் ரூ.72 லட்சம் முதலீடு செய்தாா். பின்னா் பணம் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டதாக கரூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த மாா்ச் மாதம் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் பரிமளாதேவி மற்றும் உதவி ஆய்வாளா் சுதா்சன் ஆகியோா் தலைமையிலான தனிப்படைபோலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். இதில் கணபதியை ஏமாற்றியவா் கேரள மாநிலம் மலப்புரம் கருவள்ளிபக்திக்கல்ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த முகமது பசீா் மகன் முகமதுரோஷன்(27) என தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸாா் ஏப். 20-ஆம்தேதி பெங்களூருவில் பதுங்கியிருந்த முகமதுரோஷனை கைது செய்து அவரது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.1 கோடியை முடக்கினா். கைது செய்யப்பட்ட முகமதுரோஷனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் முகமது ரோஷன்மீது மேலும் பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளதால் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலுக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து ஆட்சியா் உத்தரவின்பேரில் முகமது ரோஷனை செவ்வாய்க்கிழமை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனா்.