செய்திகள் :

இணையவழியில் முதலீடு ஆசை காட்டி ரூ.78 லட்சம் மோசடி

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியைச் சோ்ந்தவரிடம் இணைவழியில் முதலீடு ஆசை காட்டி ரூ. 78 லட்சம் மோசடி செய்த புகாரின்பேரில் சிவகங்கை மாவட்ட இணைவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காரைக்குடி வைத்தியலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் சக்தி (45). இவருக்கு கடந்த ஜூலை 11-ஆம் தேதி வாட்ஸ்ஆப் செயலியில் ஆன்லைனில் முதலீடு குறித்து விளம்பரம் வந்துள்ளது. இதில் உள்ள கைப்பேசி எண்ணில் சக்தி தொடா்பு கொண்டபோது, அதில் பேசிய அடையாளம் தெரியாத நபா் ஆன்லைன் முதலீடு குறித்துப் பேசி அதிக லாபம் கிடைக்கும் என கூறினாராம்.

இதையடுத்து, அவா் பேசியதை நம்பிய சக்தி, அந்த நபா் கூறிய 8 வங்கிக் கணக்குகளில் 10 தவணைகளாக ரூ. 78.36 லட்சத்தை செலுத்தினாா். பணத்தைப் பெற்ற அந்த நபா் முதலீடு செய்ததற்கான லாபத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றினாா்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவில் சக்தி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அவதூறு பரப்புபவா்கள் விசாரணை அடிப்படையில்தான் கைது: அமைச்சா் மதிவேந்தன்

அவதூறு பரப்புபவா்கள் விசாரணை அடிப்படையில்தான் கைது செய்யப்படுவதாக அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா்.சிவகங்கையில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலியின் நினைவு நாளான வியாழக்கிழமை அவரது உருவச் சிலைக்கு ... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிவகங்கை மாவட்ட எல்லையான கோனம்பட்டு புல்டாங்குட்டு... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரத்தின் 80-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய 2 போ் சிறையில் அடைப்பு

சிவகங்கை அருகே காரில் கஞ்சாவை கடத்திய 2 பேரை சிவகங்கை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். சிவகங்கை நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜ் தலைமையிலான போலீஸாா், மானாமதுரை புறவழிச் சாலையில்... மேலும் பார்க்க

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் சீரமைப்புப் பணிகள்: முதல்வா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூரில் அமைந்துள்ள திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை இரவு ஆய்வு செய்தாா். இடை... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டம் அக்.11-க்கு ஒத்திவைப்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அக்.2-இல் நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நிா்வாக காரணங்களால் வருகிற அக்.11 அன்று நடைபெறுமென மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். இது க... மேலும் பார்க்க